News August 16, 2024
திருச்சியை சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ.கேரளாவில் உயிரிழப்பு

திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு உதவியாளர் ராஜ்மோகன் இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் பங்கேற்க சென்றுள்ளார். அப்போது ராஜ்மோகனுக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் திருச்சி காவல் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 6, 2025
திருச்சி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோட்டைக்காரன்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மைதிலி. இவரது வீட்டில் தோட்ட வேலைக்கு வந்த கரூரைச் சேர்ந்த பாபு என்பவர், மைதிலி மற்றும் அவரது கணவர் சம்பத் ஆகியோரை கொடூரமாக தாக்கி வீட்டிலிருந்த தங்க நகை மற்றும் டூவீலரை திருடி சென்றுள்ளார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளி பாபுவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News December 6, 2025
திருச்சி: இன்று குடிநீர் வராது!

திருவரங்கம் துணை மின் நிலையத்தில் மின்பராமரிப்பு பணி இன்று (டிச.6) நடைபெற உள்ளது. இதனால் திருச்சி மத்திய சிறைச்சாலை, காஜாமலை, ரங்கா நகர், சுப்பிரமணியநகர், கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர், பஞ்சப்பூர், முன்னாள் ராணுவத்தினர் காலனி, அம்மா மண்டபம், மேலூர், தேவிபள்ளி விறகுபேட்டை, சங்கிலியாண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என திருச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
திருச்சி: மரம் முறிந்து விழுந்து பெண் பரிதாப பலி

தொட்டியம், அரங்கூரில் நேற்று புளியமரம் விழுந்ததில் நிர்மலா என்பவர் உயிரிழந்தார். நிர்மலா மரத்தடியில் காய்கறி வியாபாரம் செய்து வந்த நிலையில், சாப்பாடு வாங்குவதற்கு நடந்து செல்லும் போது புளியமரம் சாய்ந்து நிர்மலா மீது விழுந்தது. இதில், மயக்கமடைந்து கீழே விழுந்தவரை அவரது கணவர் மகாமுனி அரசு மருத்துவமனை கொண்டு சேர்த்தார். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.


