News June 27, 2024
திருச்சியில் 30ம் தேதி தமிழ் மொழி பயிற்சி.!

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் சிறார்களுக்கான தமிழ்மொழி பயிற்சி, நூல் விமர்சனம் மற்றும் ஓவிய பயிற்சிகள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியானது, வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 5 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறார்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்கும் சிறார்கள் குறிப்பேடு மற்றும் ஓவியம் வரையத் தேவையான பொருட்கள் எடுத்து வர வேண்டும்.
Similar News
News December 9, 2025
திருச்சி அருகே 50 சவரன் நகை கொள்ளை

செங்காட்டுபட்டி அடுத்த கீரம்பூர் பகுதியில் வசிக்கும் சகோதரர்களான சசிகுமார், சிவகுமார் ஆகியோரது வீடுகளில் பூட்டை உடைத்து ஆளில்லாத நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள், 50 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
News December 9, 2025
திருச்சி மாவட்ட மக்கள் கவனத்திற்கு..

திருச்சி மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் <
News December 9, 2025
திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

திருச்சி அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகள் ஆற்றுப்படுத்துநர் பணிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். https://tiruchirappalli.nic.in என்ற தலைப்பில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அன்னை சத்யா அம்மையார் அரசு குழந்தைகள் இல்லம், ஆவூர் சாலை, மாத்தூர், திருச்சி என்ற முகவரிக்கு தபால் மூலமாக வரும் 22 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


