News August 3, 2024

திருச்சியில் 25 பேர் பணியிட மாற்றம்

image

திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, இணை இயக்குநர்கள், ஆர்.டி.எம்.ஏ, துணை ஆணையர்கள் உள்ளிட்ட 25 பேரை இன்று பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன் புதிதாக உருவாக இருக்கும் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் துணை ஆணையர் செல்வபாலாஜி, முனிசிபல் இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News December 28, 2025

திருச்சியில் சோகம்: 4 வயது குழந்தை பலி!

image

பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே தனது 4 வயது ஆண்குழந்தையை ஸ்கூட்டி வாகனத்தின் முன்னாள் நிற்கவைத்துக் கொண்டு தாய் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, சாலையோரம் இருந்த மணல் சறுக்கியதில் குழந்தை தவறி கீழேவிழுந்தது. அப்போது பின்னால் வந்த சரக்கு வாகனத்தின் சக்கரம் குழந்தையின் தலையின் மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News December 28, 2025

திருச்சி: மன உளைச்சலில் தற்கொலை!

image

புலிவலம் அடுத்த ஓமந்தூர் பகுதியை சேர்ந்தவர் சிங்கதுரை. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சிங்கதுறை அடிக்கடி மதுபோதையில் வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் அவரது மனைவி பிரிந்து சென்றதால், மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று அப்பகுதியில் உள்ள மரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து புலிவலம் போலீசார் சிங்கதுரை உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

News December 28, 2025

திருச்சி: நில ஆவணங்களை சரி பார்க்க எளிய வழி!

image

திருச்சி மக்களே, உங்களது நிலம் தொடர்பான விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் உங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் வீட்டிலிருந்தே உங்களால் பெற முடியும். இந்த தகவலை மறக்கமால் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!