News August 3, 2024

திருச்சியில் 25 பேர் பணியிட மாற்றம்

image

திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, இணை இயக்குநர்கள், ஆர்.டி.எம்.ஏ, துணை ஆணையர்கள் உள்ளிட்ட 25 பேரை இன்று பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன் புதிதாக உருவாக இருக்கும் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் துணை ஆணையர் செல்வபாலாஜி, முனிசிபல் இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News December 4, 2025

திருச்சி: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

ரயிலில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கான ஒரு அறிவிப்பை திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், “ரயிலில் கற்பூரம் ஏற்றுதல் அல்லது எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பான அமைதியான யாத்திரைக்காக ஒத்துழையுங்கள். உங்கள் ஒத்துழைப்பே அனைத்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 4, 2025

திருச்சி: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

image

திருச்சி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.51,000 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News December 4, 2025

திருச்சியில் வாகன ஏலம் அறிவிப்பு – போலீஸ்

image

திருச்சி மாவட்ட காவல்துறையினரால், சட்ட விரோத மதுவிற்பனை வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத இரண்டு சக்கர வாகனங்கள்-10, நான்கு சக்கர வாகனம்-2 மூன்று சக்கர வாகனம்-1 என மொத்தம் 13 வாகனங்கள் வரும் 10-ம் தேதி திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது என திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!