News August 9, 2024

திருச்சியில் 12,655 மாணவர்கள் தேர்வு

image

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில், தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தமிழ் புதல்வன் திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வங்கி அட்டையை வழங்கினார். இந்த திட்டத்தில் திருச்சி மாவட்டம் முழுவதும் முதற்கட்டமாக 123 கல்லூரிகளைச் சேர்ந்த 12,655 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News October 29, 2025

திருச்சி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருச்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் சார்பில், 30 நாள் இலவச இருசக்கர வாகன பழுது நீக்கும் பயிற்சி, சர்வீஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேற்கண்ட பயிற்சிக்கு விண்ணப்பிக்க நிறுவனம் சார்பில் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற நவ.5-ம் தேதி அகும். மேலும் விவரங்களுக்கு 8903363396 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

News October 29, 2025

திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (அக்.29) தா.பேட்டை ஒன்றியம் பைத்தம் பாறை பகுதியிலும், மருங்காபுரி ஒன்றியம் செவல்பட்டி பகுதியிலும், மணிகண்டம் ஒன்றியம் அல்லித்துறை பகுதியிலும் நடைபெற உள்ளது. மேலும் பொன்னம்பட்டி பேரூராட்சி மற்றும் துறையூர் நகராட்சி பகுதியிலும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 28, 2025

திருச்சி: ரூ.30,000 மாத சம்பளத்தில் அரசு வேலை

image

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. சம்பளம்: ரூ.19,500 – 71,900
3. வயது வரம்பு: 18 வயதிற்கு மேல்
4. கடைசி தேதி : 16.11.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே CLICK<<>> செய்க.
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!