News April 8, 2025
திருச்சியில் வேலைவாய்ப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Digital Marketing Manager) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News October 15, 2025
திருச்சி: தடுப்பு சுவரில் டூவீலர் மோதி பலி

திருச்சி மாவட்டம், பி.மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரணவ் (58). இவர் நேற்று துறையூரில் உள்ள தனது மகன் பிரபுவை பார்ப்பதற்காக டூவீலரில் சென்றுள்ளார். அப்போது ஆத்தூர் ரவுண்டானா அருகே சென்றபோது, அவரது டூவீலர் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
News October 15, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, வரும் நவ.4, 5 ஆகிய தேதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது. இதில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம். வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
திருச்சி மாவட்டத்தில் 128.3 மி.மீ மழை பதிவு

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (அக்.14) மாலை முதல் நள்ளிரவு வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக மருங்காபுரி கோவில்பட்டியில் 18.1 மி.மீ, துவாக்குடியில் 10.1 மி.மீ, தென்பரநாடு பகுதியில் 15 மி.மீ, துறையூர் பகுதியில் 15 மி.மீ என மாவட்டம் முழுவதும் 128.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 5.35 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.