News August 10, 2024
திருச்சியில் மீண்டும் முகநூல் மோதல்

திருச்சியை சேர்ந்த மூத்த அமைச்சர் நேருவின் செயல்பாடுகளால், லால்குடி தொகுதி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் அதிர்ச்சியில் உள்ளார். எம்எல்ஏவின் நேற்றைய முகநூல் பதிவில், லால்குடி சட்டமன்ற தொகுதி இ.வெல்லனூரில் காலை “மக்களுடன் முதல்வர் திட்டத்தை” நான் துவக்கி வைத்தேன். மதியம் 1 மணிக்கு அமைச்சர் நேரு பட்டா வழங்குகிறார். ஒரே நிகழ்ச்சி இரண்டு முறை நடந்துள்ளது. இதுதான் திருச்சியில் நடைமுறை என்று பதிவிட்டுள்ளார்.
Similar News
News December 16, 2025
திருச்சி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 16, 2025
திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (டிச.17) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக திருச்சி ஈபி ரோடு, தொட்டியம், பாலசமுத்திரம், ஏலூர்பட்டி, காட்டுபுத்தூர், முருங்கை, நாகையநல்லூர், சமுத்திரம், ஸ்ரீராமசமுத்திரம், அரங்கூர், லால்குடி, பின்னவாசல், மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
News December 16, 2025
சூப்பர் வாய்ப்பு: திருச்சியில் வாகன ஏலம் அறிவிப்பு

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட 26 நான்கு சக்கர வாகனங்கள், 3 இருசக்கர வாகனம் என மொத்தம் 29 வாகனங்கள் பொது ஏலம் மூலம் வரும் 19-ம் தேதி கே.கே நகர் ஆயுதப்படை மைதானத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதனை ஏலம் எடுக்க விரும்புவோர் ஆதார் அட்டையுடன், முன்பணம் ரூ.5000 செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என திருச்சி மாநகர கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.


