News August 10, 2024
திருச்சியில் மீண்டும் முகநூல் மோதல்

திருச்சியை சேர்ந்த மூத்த அமைச்சர் நேருவின் செயல்பாடுகளால், லால்குடி தொகுதி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் அதிர்ச்சியில் உள்ளார். எம்எல்ஏவின் நேற்றைய முகநூல் பதிவில், லால்குடி சட்டமன்ற தொகுதி இ.வெல்லனூரில் காலை “மக்களுடன் முதல்வர் திட்டத்தை” நான் துவக்கி வைத்தேன். மதியம் 1 மணிக்கு அமைச்சர் நேரு பட்டா வழங்குகிறார். ஒரே நிகழ்ச்சி இரண்டு முறை நடந்துள்ளது. இதுதான் திருச்சியில் நடைமுறை என்று பதிவிட்டுள்ளார்.
Similar News
News November 23, 2025
திருச்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

திருச்சி மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!
News November 23, 2025
திருச்சி மாவட்ட நூலகத்தில் குரூப் 4 மாதிரித் தேர்வு

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டி தேர்வுக்கான கட்டணமில்லா மாதிரித் தேர்வு வரும் 24-ம் தேதி காலை 10 – 1:30 மணி வரை நடைபெற உள்ளது. ஓஎம்ஆர் தாளில் விடையளிக்கும் இத்தேர்வில், குரூப் 4 தேர்வுக்கான முழு பாடப்பகுதியில் இருந்தும் வினாக்கள் இடம் பெறும். தேர்வின் இறுதியில் அதிக மதிப்பெண் பெற அறிவுரை, வழிமுறைகள் வழங்கப்படும் என மாவட்ட நுாலக அலுவலகம் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
News November 23, 2025
திருச்சி மாவட்டத்தில் நாளை மின் தடை அறிவிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் பன்னாங்கொம்பு ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை நவ.24ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படுமென மின்துறை சார்பில் அறிவித்துள்ளனர்.


