News March 27, 2024
திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரைவைகோ பேட்டி.!

திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு மதிமுக வேட்பாளர் துரைவைகோ பேட்டி அளித்தார்: அதில், தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் கொடுக்க மறுத்தாலும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும்போது, அவர்கள் பம்பரம் சின்னம் ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. பாஜகவை எதிர்க்கும் இயக்கங்களை முடக்கவே , இதுபோன்று வருமான வரித்துறை, அமலாக்கத்துறை தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு பயன்படுத்துகிறது என்றார்.
Similar News
News December 28, 2025
திருச்சியில் சோகம்: 4 வயது குழந்தை பலி!

பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே தனது 4 வயது ஆண்குழந்தையை ஸ்கூட்டி வாகனத்தின் முன்னாள் நிற்கவைத்துக் கொண்டு தாய் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, சாலையோரம் இருந்த மணல் சறுக்கியதில் குழந்தை தவறி கீழேவிழுந்தது. அப்போது பின்னால் வந்த சரக்கு வாகனத்தின் சக்கரம் குழந்தையின் தலையின் மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 28, 2025
திருச்சி: மன உளைச்சலில் தற்கொலை!

புலிவலம் அடுத்த ஓமந்தூர் பகுதியை சேர்ந்தவர் சிங்கதுரை. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சிங்கதுறை அடிக்கடி மதுபோதையில் வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் அவரது மனைவி பிரிந்து சென்றதால், மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று அப்பகுதியில் உள்ள மரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து புலிவலம் போலீசார் சிங்கதுரை உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
News December 28, 2025
திருச்சி: நில ஆவணங்களை சரி பார்க்க எளிய வழி!

திருச்சி மக்களே, உங்களது நிலம் தொடர்பான விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், <


