News March 27, 2024

திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரைவைகோ பேட்டி.!

image

திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு மதிமுக வேட்பாளர் துரைவைகோ பேட்டி அளித்தார்: அதில், தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் கொடுக்க மறுத்தாலும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும்போது, அவர்கள் பம்பரம் சின்னம் ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. பாஜகவை எதிர்க்கும் இயக்கங்களை முடக்கவே , இதுபோன்று வருமான வரித்துறை, அமலாக்கத்துறை  தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு பயன்படுத்துகிறது என்றார்.

Similar News

News December 20, 2025

மணப்பாறை: பொதுமக்கள் நடமாட தடை

image

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைபாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் வரும் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலும், ஜன.5 முதல் 7 ஆம் தேதி வரையிலும் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. ஆகவே மேற்குறிப்பிட்ட தேதிகளில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் நடமாடக்கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News December 20, 2025

திருச்சி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

கடந்த 2019ம் ஆண்டு மணப்பாறை ஆண்டவர் கோவில் பகுதியில் ஜெகதீஷ் பாண்டியன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டடார். இவ்வழக்கில் கைதான வேடசந்தூரைச் சேர்ந்த அரவிந்த்-க்கு ஆயுள் தண்டனையும், பேகம்பூரைச் சேர்ந்த முத்துவேல், திருச்சியைச் சேர்ந்த பாதுஷா, ஆனந்த், தேனியைச் சேர்ந்த மதன்குமார் உள்ளிட்டோருக்கு கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

News December 20, 2025

திருச்சி: மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் சாவு

image

முசிறி எல்லையம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட்ராஜ் (39). தொழிலாளியான இவர் சடையப்ப நகரி; உள்ள ஓர் வீட்டில் கண்ணாடி மாட்டுவதற்காக சென்றுள்ளார். வேலை முடிந்ததும் அங்கிருந்த மாமரம் ஒன்றில், மணிகண்டன் மாங்காய் பறிப்பதற்காக ஏறியுள்ளார். அப்போது தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!