News January 23, 2025
திருச்சியில் பொது விநியோகத் திட்ட கூட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 25ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, தொட்டியம், லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, மருங்காபுரி ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News November 16, 2025
திருச்சி: ரூ.45,000 சம்பளத்தில் பேங்க் வேலை

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 21 – 30 வயதுக்குட்பட்ட நபர்கள்,<
News November 16, 2025
திருச்சி: பள்ளி மாணவன் தற்கொலை

மணிகண்டம் அருகே நாகமங்கலத்தை சேர்ந்த லாரன்ஸ் மகன் ரோஷன் (15). தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ரோஷன் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரோஷன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மாணவன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 16, 2025
திருச்சி: ஆசிரியர் தகுதி தேர்வில் 576 பேர் ஆப்சென்ட்

திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – 1, 14 தேர்வு மையங்களில் நேற்று நடைபெற்றது. இத்தேர்வுக்கு 3951 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 3375 பேர் மட்டுமே இன்று தேர்வு எழுதினர். 576 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. இன்று ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – 2, 51 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இதில் 15,286 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர்.


