News August 8, 2024

திருச்சியில் பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பெரியார் பிறந்த நாளை கொண்டாடுவதும், அந்த நாளில் விருது வழங்குவதும் வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெரியார் பிறந்தநாளில் பெரியார் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

Similar News

News November 20, 2025

ஶ்ரீரங்கம் கோவிலில் வேலை வாய்ப்பு

image

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இளநிலை உதவியாளர் பதவிக்கான 10 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். இதற்கு வரும் நவ.25ஆம் தேதிக்குள் விண்ணப்பக்கலாம். மேலும் விவரங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் <>srirangamranganathar.hrce.tn.gov.in<<>> என்ற தளத்தை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 20, 2025

திருச்சி மாவட்ட போலீசார் அதிரடி

image

திருச்சி சமயபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எஸ்.ஆர்.எம். மருத்துவமனை அருகே 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது தொடர்ந்து குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், நேற்று மங்கிலால் என்பவரும் திருச்சி எஸ்.பி பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

News November 20, 2025

திருச்சி: பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் – புகார்

image

தென்காசியை சேர்ந்த திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன் பிரதமர் மோடி குறித்து பொது வெளியில் அநாகரிகமாக கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறியும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் திருச்சி மாவட்டத் தலைவர் லெனின் பாண்டியன் தலைமையில், திருச்சி கன்ட்டோன்மென்ட் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது.

error: Content is protected !!