News March 27, 2024
திருச்சியில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு

பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு, திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தினால் நியமிக்கப்பட்ட, தேர்தல் பார்வையாளர் தினேஷ் மற்றும் தேர்தல் பார்வையாளர் அமித் குமார் விஸ்வகர்மா ஆகியோர் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் முன்னிலையில், மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
Similar News
News November 12, 2025
திருச்சி: டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து மரணம்

சிவகங்கையை சேர்ந்தவர் தினகரன் (29). இவர் கடந்த 6-ம் தேதி நவல்பட்டு 100 அடி சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்ததார். அப்போது அய்யனார் கோவில் அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அவர் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 12, 2025
திருச்சி: RKT பார்சல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

திருச்சி மாநகரில் அமைந்துள்ள RKT ஸ்பீடு பார்சல் நிறுவனத்தில் காலியாக உள்ள ACCOUNTANT உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்த, ஆண் மற்றும் பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.10,000 முதல் ரூ.13,500 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
News November 12, 2025
திருச்சி: காணாமல் போனவர் பிணமாக மீட்பு

மணப்பாறை அடுத்த மணப்பட்டி பிரிவு அருகே இன்று காலை சீகம்பட்டியைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் சாலையோரத்தில் மர்மமான முறையில் இறந்த கிடந்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


