News August 14, 2024
திருச்சியில் துரை வைகோ கண்டனம்

திருச்சி எம்.பி. துரை வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருச்சி விமான நிலையத்தில் சமஸ்கிருதத்தில் கல்வெட்டு வைத்திருப்பது ஒரு சர்ச்சையை கிளப்பி மதவாத அரசியல் செய்வதற்காக தான். இது கண்டிக்கத்தக்க விஷயம். ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கி இருப்பதாக பாஜகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
Similar News
News December 1, 2025
திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்கள், தங்களது எஸ்ஐஆர் படிவத்தில் கோரப்பட்டுள்ள வாக்காளர்கள் அல்லது வாக்காளர்கள் உறவினர்களின் 2002/2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் விவரங்கள் தெரியவில்லை என்றால், படிவத்தில் அடிப்படை விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து, படிவத்தின் இறுதியில் கையொப்பமிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
திருச்சி: டூவீலரில் இருந்து விழுந்து பரிதாப பலி

திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரத்தை சேர்ந்தவர் வீரமணி (26). இவருக்கு ஒரு மனைவியும், 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வீரமணி தன் தங்கையின் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்கபதற்காக திருவெறும்பூர் நோக்கி சென்றுள்ளார். அப்போது திருவெறும்பூர் ரயில்வே பாலம் அருகே டூவீலரில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 30, 2025
திருச்சி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

திருச்சி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், லால்குடி பகுதி கல்லக்குடி 43.4 மில்லி மீட்டர், லால்குடி 38.4 மில்லி மீட்டர், புள்ளம்பாடி 61.6 மில்லி மீட்டர், தேவி மங்கலம் 27.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், சமயபுரம் 44 மில்லி மீட்டர், சிறுகுடி 30 மில்லி மீட்டர், நாவலூர் கொட்டுப்பட்டு 16.5 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.


