News March 30, 2024
திருச்சியில் தானியங்கி ஆய்வகம் தொடக்கம்,

திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் இந்தியாவின் முதல் தானியங்கி தொழில்நுட்ப தொழில்துறை ஆய்வகம் நேற்று தொடங்கப்பட்டது. இந்திரா கணேசன் கல்வி குழும தலைவர் கணேசன் தலைமையிலும் செயலாளர் ராஜசேகரன் மற்றும் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர், சென்னை பல்கலை கழக துணை வேந்தர் ராஜ் திறந்து வைத்தார். தானியங்கி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்கள் திறன் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
Similar News
News October 17, 2025
திருச்சி: மகளை பலாத்காரம் செய்த தந்தை; கோர்ட் அதிரடி

திருவெறும்பூரை சேர்ந்தவர் கணேசன் (42) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 2018-ம் ஆண்டு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, தன் சொந்த மகளை பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கருவுற்றார். இதையடுத்து அவர் போக்சோவில் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கின் விசராணை திருச்சி மகிளா கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. இதில் கணேசனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூ.20,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News October 17, 2025
திருச்சி: மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டுகோள்

தீபாவளி தினத்தன்று உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கடந்தாண்டை போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மாசற்ற வகையில் தீபாவளியை கொண்டாட வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News October 16, 2025
மணப்பாறை: வேளாண்மை அலுவலகத்தில் ஆய்வு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அமைந்துள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சரவணன் இன்று நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வேளாண்மை அலுவலகத்தின் செயல்பாடுகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் மோகனா, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சிவராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.