News April 2, 2025
திருச்சியில் செய்தியாளர்களுக்கு அழைப்பு

சுதந்திர போராட்ட தியாகி வ.வே.சுப்பிரமணிய அய்யரின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை (02.04.2025) காலை 8:45மணியளவில், திருச்சி வரகனேரியில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி வ.வே.சுப்பிரமணிய அய்யரின் நினைவில்லத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு கலெக்டர் மா.பிரதீப் குமார் மாலை அணிவித்து மலர் தூவி அரசின் சார்பில் மரியாதை செய்ய உள்ளார். இதில் செய்தியாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 11, 2025
திருச்சி: பஸ்சில் இருந்து கீழே விழுந்து சாவு

புள்ளம்பாடி அடுத்த ஆலம்பாக்கத்தை சேர்ந்தவர் விக்டர்ராஜ் (31). இவர் அரியலூர் அருகே உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று விக்டர்ராஜ் வேலை முடிந்து அரியலூரில் இருந்து புள்ளம்பாடிக்கு அரசு பஸ்சில் வந்துகொண்டிருந்தார். அப்போது புள்ளம்பாடி அருகே இறங்குவதற்காக படியில் நின்ற அவர் மீது டூவீலர் ஒன்று மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News December 11, 2025
திருச்சி: பசுமை சாம்பியன் விருது விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறந்த பங்களிப்பை செய்யும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு “பசுமை சாம்பியன்” விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpcp.gov.in என்ற தளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து வரும் ஜனவரி 20-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
திருச்சி: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

திருச்சி மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


