News August 14, 2024

திருச்சியில் சிறப்பு தொழில் கடன் முகாம்

image

திருச்சியில் ஆக.19 முதல் செப்.6 வரை சிறப்பு தொழில்கடன் வழங்கல் முகாம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கு சிறப்புத் திட்டங்களின்கீழ் கடனுதவி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் திருச்சி கிளையில் இந்த முகாம் நடைபெறுகிறது. தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் லட்சம் வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0431-2460498 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News September 19, 2025

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மத்திய அரசின் ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் இன மாணவ, மாணவிகள் நடப்பு நிதியாண்டிற்கான கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News September 19, 2025

தொட்டியத்தில் ஆட்டோ மீது பைக் மோதி விபத்து

image

தொட்டியம், பண்ணைவீடு பகுதியில் நேற்று மாலை 3 சக்கர ஆட்டோ இளநீா் ஏற்றிக்கொண்டு திரும்பிய போது, திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி பைக்கில் சென்றவர் ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோவில் இருந்த 2 பேர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு நாமக்கல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தொட்டியம் போலீசார் விசாரணை

News September 19, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட 1999 மனுக்கள்

image

திருச்சியில் இன்று 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாம்களில் பொதுமக்களிடமிருந்து 1999 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் கைலாசபுரத்தில் 196, மணிகண்டத்தில் 180, கல்லக்குடியில் 361, அதவத்தூரில் 186, லால்குடியில் 480, நடுப்பட்டியில் 464, தா.பேட்டையில் 334, எரகுடியில் 458 மனுக்களும் பெறப்பட்டுள்ளதாக ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!