News August 25, 2024
திருச்சியில் கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட பெண் பலி

மருங்காபுரியை சேர்ந்த வீரம்மாள் என்பவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். எனவே அவர் யாரிடமும் ஆலோசிக்காமல் நேற்று முன்தினம் கருக்கலைப்பு மருந்துகளை அதிகமாக எடுத்துள்ளார். இதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 10, 2025
திருச்சி: காளான் வளர்ப்பு பயிற்சி அறிவிப்பு

சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில், காளான் வளர்ப்பு பற்றிய ஒரு நாள் கட்டணப் பயிற்சி வரும் டிச.,12-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு கையேடு, மதிய உணவு, சான்றிதழ்கள் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 0431-2962854, 9171717832 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 10, 2025
திருச்சி: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
News December 10, 2025
திருச்சி: ரூ.50,000 பரிசு அறிவிப்பு!

நவல்பட்டு அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்படும் 6-ம் ஆண்டு கபடி போட்டி வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.50,000, ரூ.40,000, ரூ.30,000, ரூ.20,000 என ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள கபடி வீரர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


