News August 25, 2024

திருச்சியில் கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட பெண் பலி

image

மருங்காபுரியை சேர்ந்த வீரம்மாள் என்பவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். எனவே அவர் யாரிடமும் ஆலோசிக்காமல் நேற்று முன்தினம் கருக்கலைப்பு மருந்துகளை அதிகமாக எடுத்துள்ளார். இதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 7, 2025

திருச்சி : திருமணத்திற்கு 1 பவுன் தங்கம், ரூ.25,000!

image

1. திருச்சி மாவட்ட மக்களே, ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000 பணம் & 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
2. இதற்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை அணுக வேண்டும்.
3. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
4. திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
5. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News November 7, 2025

திருச்சி: ட்ரோன்கள் பறக்க தடை

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 9 ஆம் தேதி இரவு திருச்சி வருகை தர உள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு காரணம் கருதி 09.11.2025 முதல் 10.11.2025 நள்ளிரவு 12 மணி வரை 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 7, 2025

திருச்சி மாவட்டத்திற்கு 2-ஆம் இடம்!

image

திருச்சி மாவட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்ட 29,688 மாணவர்களில் 18,882 மாணவர்கள் அடிப்படை கற்றல் அடைவு தேர்வில் தேர்ச்சி (63%) பெற்றுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தையும், திருச்சி மாவட்டம் 2-ம் இடத்தையும் பெற்றுள்ளது. தேர்ச்சி பெறாத 10,882 மாணவர்களுக்கு மீண்டும் 6 வாரங்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!