News August 25, 2024
திருச்சியில் கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட பெண் பலி

மருங்காபுரியை சேர்ந்த வீரம்மாள் என்பவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். எனவே அவர் யாரிடமும் ஆலோசிக்காமல் நேற்று முன்தினம் கருக்கலைப்பு மருந்துகளை அதிகமாக எடுத்துள்ளார். இதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 23, 2025
திருச்சி: ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News November 23, 2025
திருச்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

திருச்சி மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!
News November 23, 2025
திருச்சி மாவட்ட நூலகத்தில் குரூப் 4 மாதிரித் தேர்வு

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டி தேர்வுக்கான கட்டணமில்லா மாதிரித் தேர்வு வரும் 24-ம் தேதி காலை 10 – 1:30 மணி வரை நடைபெற உள்ளது. ஓஎம்ஆர் தாளில் விடையளிக்கும் இத்தேர்வில், குரூப் 4 தேர்வுக்கான முழு பாடப்பகுதியில் இருந்தும் வினாக்கள் இடம் பெறும். தேர்வின் இறுதியில் அதிக மதிப்பெண் பெற அறிவுரை, வழிமுறைகள் வழங்கப்படும் என மாவட்ட நுாலக அலுவலகம் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.


