News March 28, 2025

திருச்சியில் ஓராண்டில் 8 ஆயிரம் தெரு நாய்களுக்கு கருத்தடை

image

திருச்சி மாநகரத்தில் மக்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கும், தெரு நாய்களை கட்டுப்படுத்தும் வகையில், மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் நாய்களுக்கான 4 கருத்தடை மையங்கள் மூலம், நடப்பு 2024-25 நிதியாண்டில், 8 ஆயிரத்து 345 தெரு நாய்களுக்கு ரூ.1.38 கோடி செலவில் கருத்தடை செய்யப்பட்டு, ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 5, 2025

திருச்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் – புன்செய், கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர், ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக அந்த இடத்திற்கு பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் இதற்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். எனவே இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News November 5, 2025

திருச்சி: காளான் வளர்ப்பு பயிற்சி அறிவிப்பு

image

திருச்சி மாவட்டம் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கட்டணத்துடன் கூடிய காளான் வளர்ப்பு பயிற்சி வரும் 6-ம் தேதி காலை 9:30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் பல்வேறு வகையான காளான்களை கண்டுபிடித்தல், அவற்றை வளர்க்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0431-2962854 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 5, 2025

திருச்சி: ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி

image

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த 60 வயதுடைய பயணி ஒருவர் சின்ன சமுத்திரம் என்ற இடத்தில் நேற்று ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து திருச்சி இருப்புப்பாதை காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!