News June 15, 2024
திருச்சிக்கு வந்து சேர்ந்த ராஜுவின் உடல்

குவைத் நாட்டில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த திருச்சியை சேர்ந்த ராஜுவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு நவல்பட்டு அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டது. மேலும் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி ராஜுவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை ராஜுவின் மனைவியிடம் வழங்கினார்.
Similar News
News April 29, 2025
திருச்சி மாவட்டத்தில் மதுபான கடைகள் அடைப்பு

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வரும் மே.1ஆம் தேதி உலர் நாளாக கடைபிடிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சியில் இயங்கும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும். மேலும் FL2, FL3, FL3A, FL3AA, & FL11 ஆகிய ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. அன்று மது விற்பனையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News April 28, 2025
பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் TamilNilam Geo-Info என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share செய்து பயனடையுங்கள்..
News April 28, 2025
திருச்சியில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை

திருச்சியில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள Insurance Advisor (WFH) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.25,000-ரூ.50,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் <