News August 14, 2024
திருக்கோவிலூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பூமாரி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற துரிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சாலையின் அருகே உள்ள புளிய மரத்தின் மீது அதிவேகமாக மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 26, 2025
கள்ளக்குறிச்சியின் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்கள்..

கள்ளக்குறிச்சியில் பார்க்க வேண்டிய 6 முக்கிய சிவன் கோயில்கள் – 1). அசகளத்தூர் லோகபாலீஸ்வரர் கோயில். 2). செல்லம்பட்டு விஸ்வநாதசுவாமி கோயில். 3). பெருமங்கலம் சுந்தரேஸ்வரர் கோயில். 4). மகரூர் கைலாசநாதர் கோயில். 5). தண்டலை சுயம்புநாதீஸ்வரர் கோயில். 6). ரிஷிவந்தியம் அர்த்த நாரீசுவரர் கோயில். இது தவிர வேறு கோயில்கள் இருந்தால் கமெண்ட் செய்து விட்டு மறக்காம ஷேர் பண்ணுங்க.
News November 26, 2025
கள்ளக்குறிச்சி: லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியில் இன்று (நவ.26) அதிகாலையில், பார்சல் கண்டெய்னர் லாரி ஒன்று சாலை ஓரத்தில்
நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 26, 2025
இந்திய அரசியலமைப்பு நாள் உறுதி மொழி ஏற்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு நாள் இன்று (நவ.26) கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் தலைமையில், காவல்துறையினர் இந்திய அரசியலமைப்பு நாள் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


