News August 10, 2024
திருக்குறள் போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு தலா 15,000 மற்றும் சான்றிதழ், தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் https://www.tamilvalarchithurai.com என்ற வலைதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வரும் 30ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News September 16, 2025
மயிலாடுதுறை கலெக்டர் நேரில் ஆய்வு

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீட்டிற்கு வீடு தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பை சேகரிப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குப்பைகளை பொதுமக்கள் தரம் பிரித்து கொடுக்கிறார்களா என தூய்மை பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
News September 16, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரங்கள் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோயில், மணல்மேடு, சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு உள்ளிட்ட இடங்களில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை ஆறு மணி வரை ரோந்து பணி மேற்கொள்ளும் போலீசாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.
News September 15, 2025
மயிலாடுதுறைக்கு இப்படி ஒரு வரலாறா?

ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில், (ஆந்திரம் உள்ளடக்கியது) 29 ஊர்கள் மட்டுமே நகரம் என அடையாளம் காணப்பட்டு நகராட்சிகளாக ஆக்கப்பட்டது. அதில் முக்கியமாக நமது மயிலாடுதுறை நகராட்சியும் ஒன்று. இதன் மூலம் பறந்து விரிந்த சென்னை மாகாணத்தில் மயிலாடுதுறையின் முக்கியத்துவத்தை அறிய முடிகிறது. மேலும் இங்கு பல வாணிபங்கள் நடந்ததையும் இது உறுதிப்படுத்துகிறது. ஷேர் பண்ணுங்க