News April 21, 2025

திருக்குறள் எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக இயக்க கோரிக்கை

image

திருக்குறள் விரைவு ரயிலினை தினசரி இயக்க வேண்டும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். இந்த ரயில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் இந்த ரயிலில் பெரிதும் பயணம் செய்கின்றனர். இந்த ரயிலின் சேவையை தினசரி இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Similar News

News July 9, 2025

விவேக் எக்ஸ்பிரஸ் போக்குவரத்தில் மாற்றம்

image

இருகூர், பீளமேடு பிரிவில் சாலை மேம்பால பணிகள் நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி – திப்ரூகார் விவேக் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியில் இருந்து ஜூலை 9, 10, 11, 12 தேதிகளில் புறப்படுவது போத்தனூர் வழியாக செல்லும். இருகூர் மற்றும் கோயம்புத்தூர் செல்லாது. போத்தனூரில் கூடுதல் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News July 9, 2025

குமரி: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு நெல்லையில் நடைபெற உள்ளது. வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News July 9, 2025

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் கடைபிடிக்கும் 10 ஊராட்சிகளை ஊக்குவித்து தமிழக அரசு சமூக நல்லிணக்க விருதுடன் தலா 1 கோடி ரூபாய் வழங்க உள்ளது. சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோர் https://tinyurl.com/Panchayataward என்ற இணையதளத்தில் ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் ஆர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!