News May 7, 2025

திருக்காரவாசல்: நாளை கலெக்டர் தலைமையில் கிராம சபை கூட்டம்

image

மே தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில், நாளை திருக்காரவாசல் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கலந்து கொள்ள உள்ளார். கிராம சபை கூட்டங்களில் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல் மற்றும் இதரப் பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

Similar News

News December 4, 2025

திருவாரூர்: வட்டார கல்வி அலுவலர்கள் சந்திப்பு

image

திருவாரூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணிபுரிந்து வரும் சௌந்தர்ராஜன் தற்போது பணி மாறுதலில் கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் பணியாற்றி வரும் வட்டார கல்வி அலுவலர்கள் இணைந்து அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

News December 4, 2025

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் WAR ROOM அமைப்பு

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக வெள்ள கட்டுப்பாட்டு அறை (WAR ROOM) திறந்து வைக்கப்பட்டு 24 மணி நேரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. வடகிழக்கு பருவமழை சம்பந்தமான முன்னெச்சரிக்கைகளை தெரிந்து கொள்ள 1077 என்ற எண்ணிற்கு எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News December 4, 2025

திருவாரூர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

image

திருவாரூர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.51,000 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!