News May 7, 2025

திருக்காரவாசல்: நாளை கலெக்டர் தலைமையில் கிராம சபை கூட்டம்

image

மே தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில், நாளை திருக்காரவாசல் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கலந்து கொள்ள உள்ளார். கிராம சபை கூட்டங்களில் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல் மற்றும் இதரப் பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

Similar News

News December 22, 2025

திருவாரூர்: பி.ஆர்.பாண்டியன் விடுவிப்பு

image

தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கங்கள் மாநில பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் இவர்களுக்கு ஓஎன்ஜிசி வழக்கில் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த வழக்கு தற்போது நிறுத்தி வைத்து. சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், இன்று (டிசம்பர் 22) திருச்சி மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என விவசாய சங்கங்கள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 22, 2025

திருவாரூர்: விருதும், பணமுடிப்பும் வேண்டுமா?

image

மாசுக்கட்டுப்பாடு வாரியம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான பசுமை சாம்பியன் விருதுக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்து விருதும், பணமுடிப்பும் தமிழக அரசு வழங்க உள்ளது. இதற்கு www.tmpcb.gov.in வலைதளத்தில் விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்து, ஜன.20-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க….

News December 22, 2025

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் (டிச.21) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!