News October 23, 2024
திராவிட நாட்டை கண்டுபிடித்தால் 1000 பொற்காசுகள்

மதுரை மாநகர் மாவட்ட பாஜக துணைத் தலைவர் ராஜ்குமார் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். அதில் இந்தியாவில் இந்தியனாகவும், தமிழகத்தில் தமிழனாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுக்கு திராவிட நாடு எதற்கு?, மக்களே ஓட்டு வங்கி அரசியலுக்காக இல்லாமல் உணர்வில் இந்தியனாகவும் இனத்தில் தமிழனாகவும் வாழ்வோம் என்றும், திராவிட நாட்டை கண்டுபிடித்துக் கொடுத்தால் ஆயிரம் பொற்காசுகள் என சர்ச்சை போஸ்டர் அடித்துள்ளார்.
Similar News
News December 15, 2025
மதுரை: எம்.பி கனிமொழி மீது அவதூறு… ஒருவர் கைது

திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறி திருப்பரங்குன்றம் கிராம மக்கள் சார்பாக நேற்று முன்தினம் (டிச.13) உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வந்திருந்த திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கார்மேகம்(65) தூத்துக்குடி எம்பி கனிமொழி குறித்து யூடியூப் சேனலில் அவதூறாக பேசியதாக, திருப்பரங்குன்றம் போலீசார் இன்று அவரை கைது செய்தனர்.
News December 15, 2025
திருட்டு வழக்கில் 2 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை

சோழவந்தான் பகுதியில் 2020ல் நடந்த திருட்டு குற்றத்தில் கார்த்திக் என்ற சுண்டு கார்த்திக்(20), வீரமணி(20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், தீர்ப்பை நீதிபதி செல்லையா நேற்று வழங்கினார். அதில் கார்த்திக், வீரமணி ஆகிய இருவருக்கும்
தலா 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் தலா ரூ.
20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
News December 15, 2025
மதுரை: மகளிர் உரிமை தொகை வரலையா.? அரசு அறிவிப்பு

மதுரை மக்களே மகளிர் உரிமை தொகை ரூ.1000 வராதவங்க மேல்முறையீடுக்கு இத பண்ணுங்க.
1.இங்கு <
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, உங்கள் பகுதி வட்டாச்சியர்/கோட்டாட்சியரை அணுகவும்.
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.


