News October 23, 2024
திராவிட நாட்டை கண்டுபிடித்தால் 1000 பொற்காசுகள்

மதுரை மாநகர் மாவட்ட பாஜக துணைத் தலைவர் ராஜ்குமார் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். அதில் இந்தியாவில் இந்தியனாகவும், தமிழகத்தில் தமிழனாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுக்கு திராவிட நாடு எதற்கு?, மக்களே ஓட்டு வங்கி அரசியலுக்காக இல்லாமல் உணர்வில் இந்தியனாகவும் இனத்தில் தமிழனாகவும் வாழ்வோம் என்றும், திராவிட நாட்டை கண்டுபிடித்துக் கொடுத்தால் ஆயிரம் பொற்காசுகள் என சர்ச்சை போஸ்டர் அடித்துள்ளார்.
Similar News
News January 2, 2026
மதுரை: ஆட்டோ டிரைவர் கொடூர கொலையில்.. புதிய தகவல்!

பெருங்குடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முனீஸ்வரன்(25) நேற்று முன்தினம் இரவு 5 பேரால் வெட்டி கொல்லப்பட்டார். அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தியதில், பெருங்குடி திருமுருகன்( 32), வலையங்குளம் அருணாச்சலம்(32 ), சௌராஷ்டிர காலனி கார்த்திக்(28), சக்திவேல்(23) தண்யாயுதபாணி(27) ஆகிய 5 பேர் இக்கொலையை செய்தது தெரிந்தது. முன்விரோதம் காரணமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது.
News January 1, 2026
மதுரை: அனைத்து சேவைகளுக்கும் இந்த ஒரு லிங்க் போதும்.!

மதுரை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை<
News January 1, 2026
இன்று முதல் வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தில் மாற்றம்

சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரம் இன்று (புத்தாண்டு) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்ட ரயில் இனி தினந்தோறும் அரைமணி நேரம் முன்னதாகவே 1.15 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முன்னதாக புறப்படும் ரயில் மதுரையை இரவு 8.35 மணிக்கு சென்றடையும்.


