News August 17, 2024

தியாகிகளின் ஓய்வூதியம் 15,000ஆக உயர்வு

image

சுதந்திர தினத்தையொட்டி தியாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி இன்று புதுச்சேரி அரசு சார்பில் கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசும்போது, தியாகிகளுக்கு மனைப்பட்டா வழங்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்தது. அதற்கான இடமும் தேர்வாகியுள்ளது. விரைவில் மனைப்பட்டா வழங்கப்படும் என்றும், தியாகிகளுக்கான மாத ஓய்வூதியம் 12,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றார்.

Similar News

News December 20, 2025

புதுவை: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

image

சமிபத்தில் SIR பணிகள் நிறைவுற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் புதுச்சேரியில் இருந்து 85,531 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் SIR பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <>electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்தில்<<>> சென்று உங்களது வாக்காளர் அட்டை எண்ணை பதிவிட்டு எளிதாக தெரிந்து கொள்ளலாம். SHARE NOW!

News December 20, 2025

புதுச்சேரியில் கஞ்சா விற்பனை-3 பேர் கைது

image

முதலியார்பேட்டை போலீசார் நேற்று ரோந்து சென்ற போது, தேங்காய்திட்டு துறைமுக சாலையில் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்றபோது தப்பியோட முயன்ற, 3 பேரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவர்கள், குயவர்பாளையம் அரவிந்த், நெல்லித்தோப்பு அண்ணாநகர் டேனியல் (எ) டேனி மற்றும் கொம்பாக்கம் கனகவேல் என்பதும் அவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

News December 20, 2025

காரைக்கால் நகராட்சி சார்பில் முக்கிய அறிவிப்பு

image

காரைக்கால் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான, 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான விடுப்பட்ட கேட்பறிக்கைகள் (Property tax demand notice) தற்போது நகராட்சி வரி வசூலிப்பவர்களால், அந்தந்த வார்டுகளில் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்களது சொத்துக்களுக்கு உண்டான வரியை செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!