News August 17, 2024
தியாகிகளின் ஓய்வூதியம் 15,000ஆக உயர்வு

சுதந்திர தினத்தையொட்டி தியாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி இன்று புதுச்சேரி அரசு சார்பில் கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசும்போது, தியாகிகளுக்கு மனைப்பட்டா வழங்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்தது. அதற்கான இடமும் தேர்வாகியுள்ளது. விரைவில் மனைப்பட்டா வழங்கப்படும் என்றும், தியாகிகளுக்கான மாத ஓய்வூதியம் 12,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றார்.
Similar News
News January 5, 2026
புதுச்சேரி: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!
News January 5, 2026
புதுச்சேரியில் ஆறு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தென் கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளது. இதன் காரணமாக இன்று திங்கட்கிழமை முதல், வரும் 10ஆம் தேதி வரையிலான 6 நாட்களில் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, தென்மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
News January 5, 2026
புதுச்சேரி: பொங்கல் தொகுப்பை வழங்கிய முதலமைச்சர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 பொருட்கள் அடங்கிய தொகுப்பை, திலாஸ்பேட்டையில் உள்ள நியாவிலைக்கடையில் முதலமைச்சர் ரங்கசாமி பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், துறையின் அமைச்சர் திருமுருகன், அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


