News August 17, 2024

தியாகிகளின் ஓய்வூதியம் 15,000ஆக உயர்வு

image

சுதந்திர தினத்தையொட்டி தியாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி இன்று புதுச்சேரி அரசு சார்பில் கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசும்போது, தியாகிகளுக்கு மனைப்பட்டா வழங்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்தது. அதற்கான இடமும் தேர்வாகியுள்ளது. விரைவில் மனைப்பட்டா வழங்கப்படும் என்றும், தியாகிகளுக்கான மாத ஓய்வூதியம் 12,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றார்.

Similar News

News December 14, 2025

புதுவை: போலிச்சான்றிதழ் கொடுத்தவர் மீது வழக்கு

image

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில், கேரளாவை சேர்ந்த சித்திக் (21) M.Com படிப்பதற்காக விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் அவரின் சான்றிதழை சரிபார்த்த போது, அவை போலி சான்றிதழ்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பல்கலைக்கழக கண்காணிப்பு குழு சிறப்பு அதிகாரி வம்சிதரரெட்டி அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 14, 2025

புதுவை: போதை பொருள் கடத்திய 2 பேர் கைது

image

புதுவை கரையாம்புத்தூரில், 65 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருள் பிடிபட்டது. காவல்துறை வாகன தணிக்கையில் சொகு சுகாரில் இருந்த 4 பேர் தப்பியோட முயன்ற போது 1-வர் மட்டும் பிடிபட்ட நிலையில், கிருஷ்ணகிரியில் இருந்து கடத்திவரப்பட்ட போதை பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. இந்நிலையில் பிடிபட்ட நபர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 2 பேரை கைது செய்து, 1 சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News December 14, 2025

புதுச்சேரி: தேசிய விருது பெற்ற கலைஞருக்கு உற்சாக வரவேற்பு

image

கைவினை கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய விருது, இந்த ஆண்டு புதுச்சேரி முத்துப்பிள்ளை பாளையம் பாரம்பரிய கைவினை கலைஞர் மோகன்தாசுக்கு, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார். தேசிய விருது பெற்ற புதுவை திரும்பிய மோகன்தாசுக்கு, உழவர்கரை சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் மற்றும் கைவினை கலைஞர்கள் சங்கம் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

error: Content is protected !!