News August 17, 2024
தியாகிகளின் ஓய்வூதியம் 15,000ஆக உயர்வு

சுதந்திர தினத்தையொட்டி தியாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி இன்று புதுச்சேரி அரசு சார்பில் கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசும்போது, தியாகிகளுக்கு மனைப்பட்டா வழங்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்தது. அதற்கான இடமும் தேர்வாகியுள்ளது. விரைவில் மனைப்பட்டா வழங்கப்படும் என்றும், தியாகிகளுக்கான மாத ஓய்வூதியம் 12,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றார்.
Similar News
News December 18, 2025
புதுச்சேரியில் அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கக் காலக்கெடு!

புதுச்சேரி தேர்வு முகமையின் சார்பு செயலர் ஜெய்சங்கா், “புதுவை அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்காக, ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு, ஒருங்கிணைந்த மேல்நிலைப் பள்ளி நிலைத்தோ்வு மற்றும் மேல்நிலை எழுத்தர் பணிக்கு 20-ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். இளநிலை நூலக உதவியாளர் மற்றும் இதர 9 பதவிகளுக்கு 22-ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
புதுச்சேரி: புதிய பணியிடங்களை உருவாக்க கோரிக்கை

புதுச்சேரி மாநில காவல்துறை மாநாடு தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி “ஊர்காவல் படை வீரர் தேர்வில் குழப்பம் உள்ளது. இதைச் சரி செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஊர்காவல் படை வீரர்களுக்கும் பணி வழங்கப்படும்.
மத்திய அரசிடம் புதிய பணியிடங்களை உருவாக்க அனுமதியும் கோரியுள்ளோம். என்று தெரிவித்தார்.
News December 18, 2025
புதுவை: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

புதுவை மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..
1. இங்கு <
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
இதனை மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க…


