News August 17, 2024
தியாகிகளின் ஓய்வூதியம் 15,000ஆக உயர்வு

சுதந்திர தினத்தையொட்டி தியாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி இன்று புதுச்சேரி அரசு சார்பில் கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசும்போது, தியாகிகளுக்கு மனைப்பட்டா வழங்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்தது. அதற்கான இடமும் தேர்வாகியுள்ளது. விரைவில் மனைப்பட்டா வழங்கப்படும் என்றும், தியாகிகளுக்கான மாத ஓய்வூதியம் 12,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றார்.
Similar News
News December 9, 2025
காரைக்காலில் கார்னிவல் விழா குறித்து ஆலோசனை

காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கார்னிவல்- 2026 நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் காமராஜர் நிர்வாக வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் திருமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், நாக தியாகராஜன், ஆட்சியர் ரவி பிரகாஷ் கலந்து கொண்டனர். மேலும் கார்னிவல் விழா ஜன.15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை மற்றும் மலர் கண்காட்சி ஜன.15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
News December 9, 2025
புதுவை: ரயில்வே வேலை – MISS பண்ணிடாதீங்க!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.35,400
5. கல்வித்தகுதி: BE , டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. விண்ணப்பிக்க: இங்கே <
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.
News December 9, 2025
புதுச்சேரி வரும் ரயில்கள் ரத்து

தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மண்டல அதிகாரி வினோத் குமாா் நேற்று வெளியிட்ட அறிக்கையில் திருப்பதி – புதுச்சேரி பயணிகள் ரயில் திருப்பதியில் அதிகாலை தினமும் 4 மணிக்குப் புறப்படுகிறது. டிச.15-ஆம் தேதி இந்த ரயில் திருப்பதி – விழுப்புரம் இடையே மட்டும் இயக்கப்படும். புதுச்சேரி – எழும்பூா் பயணிகள் ரயில், டிசம்பர் 15ல் புதுச்சேரி விழுப்புரத்துக்கு இடையில் ரத்து செய்யப்படும் என தெரிவித்தனர்.


