News March 28, 2024

திமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

image

ஈரோடு 2024 மக்களவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக கே.இ.பிரகாஷ் போட்டியிடுகிறார். இந்நிலையில அவர் தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஈரோடு திண்டல் பகுதியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் உட்பட 60 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News July 11, 2025

ஈரோடு: குரூப்-4 எழுத இது அவசியம்

image

➡️ ஈரோடு மாவட்டத்தில் நாளை(ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது

➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.

➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.

➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.

➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.

➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.

➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News July 11, 2025

ஈரோடு: 12th முடித்தால் கிராம வங்கியில் வேலை

image

தமிழகத்தில் NABARD வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில்( NABFINS) CSO( Customer Servive Officer) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு முன் அனுபவம் தேவையில்லை, 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. 18 – 33 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், உங்களிடம் டூவீலர் இருப்பது அவசியமாகும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <> இங்கே கிளிக் செய்யவும்<<>>. 9655546769 என்கிற எண்ணை அணுகலாம். (SHARE IT)

News July 11, 2025

ஈரோடு: ரேஷன் கார்டில் மாற்றமா..?

image

ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் ஜூலை 12ஆம் தேதி அனைத்து வட்டங்களிலும் நடைபெறவுள்ளது. இதில் புதிய குடும்ப அட்டை கோருதல், நகல் குடும்பஅட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், கைபேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுவாக கொடுத்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!