News January 24, 2025
திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்

வருகின்ற 25/01/25 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திமுக கட்சியின் இளைஞரணி சார்பாக நாமக்கல் பூங்கா சாலையில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார் தலைமை தாங்குகிறார். நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பாக விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 26, 2025
நாமக்கல்: SIR படிவங்களை ரேஷன் கடைகளில் வழங்கலாம்!

வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட SIR படிவங்களை பூர்த்தி செய்து மீண்டும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திருப்பி ஒப்படைக்க வசதியாக 25.11.2025 முதல் அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள்(ம)அனைத்து அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகள்(ம) அனைத்து நியாய விலைக்கடைகள் ஆகியவற்றில் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பூர்த்தி செய்யப்பட்ட தங்களது SIR படிவங்களை ஒப்படைக்கலாம்.
News November 26, 2025
முன்னாள் படைவீரர்களின் குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட முன்னாள் படை வீரர்கள், முன்னாள் படை வீரர்களின் விதவைகள், படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நவ.27 நாளை பிற்பகல் 3.30 மணி அளவில் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர், படைவீரர்களின் குடும்பத்தார், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைளை தெரிவிக்கலாம்.
News November 26, 2025
குமாரபாளையம் அருகே தட்டி தூக்கிய போலீசார்!

குமாரபாளையம் அருகே பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பெரந்தர்காடு பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக ஆனந்த், யோகேஸ்வரன், பிரபு, கார்த்தி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.950-ஐ பறிமுதல் செய்தனர். இதேபோன்று குமாரபாளையம் கத்தேரி பிரிவு பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற சம்பத், இளங்கோவன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


