News April 19, 2025

திமிங்கல எச்சம் விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது!

image

ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி அருகே பல கோடி மதிப்பிலான, 18 கிலோ எடை கொண்ட திமிங்கல எச்சம் விற்பனை செய்ய முயன்ற வெங்கடேசன், அப்துல் ஜலீல், ரவி ஆகிய 3 பேரை, ராசிபுரம் வனத்துறை அலுவலர்கள் கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Similar News

News April 20, 2025

நாமாக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆர்டிஓக்கள் தலைமையில், வருகிற 22-ம் தேதி நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தங்களது கோரிக்கைகளையும் தெரிவித்து பயன் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News April 19, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (19/04/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – தீபா (9443656999) ,வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News April 19, 2025

நாமக்கல்: முட்டை கொள்முதல் விலையில் மாற்றமில்லை

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (19-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.15 காசுகளாக நீடித்து வருகிறது. கடந்த (ஏப்ரல் 9) முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.15 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து பத்து நாட்களாக முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.

error: Content is protected !!