News March 3, 2025
திண்டுக்கல்: +2 தேர்வு எழுதும் 21,817 பேர்

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 216 பள்ளிகளைச் சேர்ந்த 10,361 மாணவர்கள், 11,451 மாணவிகள் என மொத்தம் 21,817 பேர் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில் 86 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. தனித்தேர்வர்களாக 273 பேர் எழுதுகின்றனர்.
Similar News
News November 18, 2025
பழனி: முன் விரோதம் காரணமாக வாலிபர் படுகொலை

பழனி அடுத்த கோதைமங்கலம் மதுபானக்கூடம் அருகே சின்னதம்பி (எ) தோமையார் என்பவர் முன் விரோதம் காரணமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். தகவல் அறிந்த பழனி டிஎஸ்பி தனஞ்செயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை தொடங்கினர். மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
News November 18, 2025
பழனி: முன் விரோதம் காரணமாக வாலிபர் படுகொலை

பழனி அடுத்த கோதைமங்கலம் மதுபானக்கூடம் அருகே சின்னதம்பி (எ) தோமையார் என்பவர் முன் விரோதம் காரணமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். தகவல் அறிந்த பழனி டிஎஸ்பி தனஞ்செயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை தொடங்கினர். மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
News November 18, 2025
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திண்டுக்கல், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (நவ.21) காலை 10.30க்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். இதில் பல துறை அலுவலர்கள் கலந்து கொண்டு அரசின் மானியத் திட்டங்கள், வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனை, கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, வங்கி மற்றும் கூட்டுறவு கடன் பற்றிய விளக்கங்களை வழங்குவார்கள். விவசாயிகள் கோரிக்கைகள் குறித்த மனு அளிக்கலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்தார்.


