News August 10, 2024

திண்டுக்கல்: வைகை குடிநீர் பணிகள் துவக்கம் எப்போது?

image

ரெட்டியார்சத்திரம் அண்ணா பல்கலையில் நேற்று நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி ” மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டத்தில் 75 நிறுவனங்களில் படிக்கும் 5112 மாணவர்கள் பயன் பெறுவர். ஆத்தூர், நிலக்கோட்டை, திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.550 கோடி மதிப்பிலான வைகை அணை திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும்” என்றார்.

Similar News

News September 18, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று இரவு 11 மணி முதல் வியாழக்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 17, 2025

திண்டுக்கல்: 8 ஆம் வகுப்பு போதும்! அரசு வேலை…

image

திண்டுக்கல் மக்களே, 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 17, 2025

திண்டுக்கல்லில் விஷம் குடித்து தற்கொலை!

image

திண்டுக்கல்: நத்தம், அண்ணாநகரைச் சேர்ந்தவர் முருகேசன்(64). இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று(செப்.16) மதுரை சாலையில் உள்ள பள்ளபட்டி பிரிவு பகுதியில் உள்ள தேங்காய் குடோனில் விஷம் குடித்து இறந்து கிடந்தார்.

error: Content is protected !!