News August 10, 2024
திண்டுக்கல்: வைகை குடிநீர் பணிகள் துவக்கம் எப்போது?

ரெட்டியார்சத்திரம் அண்ணா பல்கலையில் நேற்று நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி ” மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டத்தில் 75 நிறுவனங்களில் படிக்கும் 5112 மாணவர்கள் பயன் பெறுவர். ஆத்தூர், நிலக்கோட்டை, திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.550 கோடி மதிப்பிலான வைகை அணை திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும்” என்றார்.
Similar News
News December 3, 2025
திண்டுக்கல் மக்களே உஷார்: பல லட்சம் மோசடி!

வத்தலக்குண்டு வீருவீடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் 52. இவர் தன் மகன்கள் உட்பட 3 பேருக்கு அரசு வேலை வாங்கி தரும்படி ரூ.36.10 லட்சம் பணத்தை கரூர் குமார், நிலக்கோட்டை மாரிமுத்துவிடம் கொடுத்தார். பணத்தை பெற்ற அவர்கள் தலை மறைவாகினர். இதுகுறித்து மாரிமுத்து, குமார், உட்பட 4 பேர் மற்றும் இதில் தொடர்புடைய கரூரைச் சேர்ந்த கவுரிசங்கரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
News December 3, 2025
திண்டுக்கல்: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த ஆலோசனை

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- 2026 பணிகள் வருகின்ற 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பில் இல்லாத, இறப்பு மற்றும் நிரந்தர குடிபெயர்ந்தோர் விவரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தெரிவிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் & மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
News December 3, 2025
திண்டுக்கல்: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த ஆலோசனை

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- 2026 பணிகள் வருகின்ற 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பில் இல்லாத, இறப்பு மற்றும் நிரந்தர குடிபெயர்ந்தோர் விவரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தெரிவிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் & மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.


