News April 28, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் மழை

திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வந்த சூழலில் நேற்றிலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக விட்டுவிட்டு கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் இப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உங்க ஊரில் மழை பெய்திருந்தால் கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News November 13, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (நவம்பர் 13) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல்துறைக்குரிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 13, 2025
திண்டுக்கல்லில் மீன் குஞ்சுகள் விற்பனைக்கு தயார்

திண்டுக்கல்லில் கட்லா, ரோகு, மிர்கால் 16 லட்சம் வளர்த்தெடுக்கப்பட்டு விற்பனை
மீன் குஞ்சுகள் விற்பனைக்கு தயாராக உள்ளது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். மேலும், தகவலுக்கு அணைப்பட்டி மீன்வள சார் ஆய்வாளர் பாப்பத்தியை கைபேசி 63748 26415 என்ற எண்ணிலும், பழநி மீன்வள ஆய்வாளர் சாந்தியை கைபேசி 75982 36815 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
நத்தம்: வெளிநாட்டில் கணவன்.. மனைவி அதிர்ச்சி முடிவு!

நத்தம் அருகே ஒத்தினிப்பட்டியை சேர்ந்தவர் கரந்தமலை (34). சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி சிலம்பரசி (28). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்த கரந்தமலை, கடந்த வாரம் மீண்டும் ஊருக்கு சென்று விட்டார். இதனால் ஏற்பட்ட கவலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிலம்பரசி சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


