News April 28, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் மழை

திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வந்த சூழலில் நேற்றிலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக விட்டுவிட்டு கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் இப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உங்க ஊரில் மழை பெய்திருந்தால் கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News December 6, 2025
திண்டுக்கல் காவல்துறையின் மழைக்கால பாதுகாப்பு அறிவுரை

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இணையதளம் மூலம் இன்று வெளியிட்ட விழிப்புணர்வு அறிவிப்பில், ஏரி, குளம், கால்வாய்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளை நீர்நிலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
News December 6, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, போலியான வேலை வாய்ப்பு விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை வாங்கிக் தருவதாக கூறி பணம் பெறும் மோசடிகள் அதிகரித்து வருவதால், எந்த நபரின் போலியான வாக்குறுதியை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், உடனே 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
News December 6, 2025
நத்தத்தில் தட்டி தூக்கிய அமைச்சர்!

நத்தம் சட்டமன்றத் தொகுதி பகுதிகளில் பல்வேறு மாற்று கட்சியினர் தங்கள் கட்சிகளை விட்டு விலகி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் R.சக்கரபாணி தலைமையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம், ஒன்றிய செயலாளர்கள் சேக்சிக்கந்தர் பாட்சா, பழனிச்சாமி, ரத்தினக்குமார், தொகுதி பார்வையாளர் ரஞ்சன்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


