News March 28, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு தொடக்கம்

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (28.3.25) தொடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 10,838 மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 9,761 மாணவர்கள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 4,523 மாணவர்கள் என மொத்தம் 25,122 பேர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்.
Similar News
News December 8, 2025
திண்டுக்கல் கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

திண்டுக்கல் மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம்.இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News December 8, 2025
திண்டுக்கல்லில் பேருந்து மோதி மூதாட்டி பலி!

திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகர் ரவுண்டானா பகுதியில் சாலையை கடக்க நின்று கொண்டு இருந்த மூதாட்டி மீது வழியாக வந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக திடீரென மோதியது. இந்த விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 8, 2025
திண்டுக்கல்லில் வேலை வேண்டுமா?

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற டிச.13 அன்று ஒட்டன்சத்திரம் கிறித்துவப் பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தப்படவுள்ளது. இதில் 3000-க்கும் மேற்பட்டடோர் தேர்வு செய்யப்படவுள்ளனர். 8ஆம் வகுப்பு முதல் பட்டயப்படிப்பு வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். தங்களின் கல்விச்சான்று,ஆதார் அட்டை,சுய விவரக் குறிப்பு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றின் நகல்களுடன் பங்கேற்கலாம். ஷேர் பண்ணுங்க!


