News January 23, 2025

திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் காவலர்கள் இரு பிரிவினராக பிரித்து நான்கு பணி மேற்கொள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி இன்று இரவு 10:00 மணி முதல் 2 மணி வரை ஒரு பிரிவினரும் 2 மணி முதல் காலை 6 மணி வரையும் மற்றொரு பிரிவினரும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை அவசர எண்ணான 100 அழைத்து தெரிவிக்கலாம்.

Similar News

News November 20, 2025

திண்டுக்கல்: பல லட்சம் இழந்த இளம்பெண் விபரீத முடிவு!

image

திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டி அருகே கோபாலபுரத்தில் வசித்து வந்த லாவண்யா (25) சமூக வலைதளங்களில் வந்த போலி வேலைவாய்ப்பு விளம்பரத்தை நம்பி மோசடி கும்பலுக்கு பல தவணைகளில் ரூ.5 லட்சம் ஆன்லைனில் செலுத்தியுள்ளார். இந்நிலையில், வேலை கிடைக்காததாலும் பணம் ஏமாற்றப்பட்டதாலும் மனமுடைந்து நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News November 20, 2025

திண்டுக்கல்: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.ஷேர் செய்யுங்க.

News November 20, 2025

திண்டுக்கல்: லஞ்சம் கேட்டாங்களா? உடனே பண்ணுங்க!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspdgldvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0451-2461828 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!