News August 14, 2024

திண்டுக்கல் மாநகராட்சி செயற்கை நீருற்று சுத்தம்

image

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக நுழைவு பகுதியில் செயற்கை நீருற்று உள்ளது. இது விழாக்காலங்களில் மட்டும் பயன்பாட்டிலிருக்கும். மற்ற நேரங்களில் கவனிக்கப்படாமல் கிடக்கும். இதனால் இங்கு மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியும் அதிகரித்தது. இந்நிலையில், கமிஷனர் ரவிச்சந்திரன் செயற்கை நீருற்றை ஆய்வு செய்து, உடனே சுத்தப்படுத்த உத்தரவிட்டார். அதன்படி சுகாதார பணியாளர்கள் செயற்கை நீருற்றை நேற்று சுத்தம் செய்தனர்.

Similar News

News October 18, 2025

திண்டுக்கல்: கிராம ஊராட்சி செயலாளர் வேலை! அரிய வாய்ப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 முதல் 50400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!

News October 18, 2025

திண்டுக்கல்: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

image

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்து உழவன் செயலி வாயலாக Apply செய்யவும். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை நேரில் அணுகவும். தகவலை ஷேர் பண்ணுங்க!

News October 18, 2025

திண்டுக்கல்லில் இப்படியும் மோசடி? உஷார்

image

ஒட்டன்சத்திரம்,வேடசந்தூர், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகளிடம், சேலத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 49) என்பவர் தன்னைப் பிரபல பிராண்ட் அரிசியின் ஏஜென்ட் என அறிமுகப்படுத்தி ரூபாய் 7,20,000/- பணத்தைப் பெற்றுக்கொண்டர். ஆனால் அதற்கான அரிசியை அனுப்பாமல் வியாபாரிகளை ஏமாற்றி வந்துள்ளார்.இது குறித்த புகாரின் பேரில் சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!