News August 14, 2024
திண்டுக்கல் மாநகராட்சி செயற்கை நீருற்று சுத்தம்

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக நுழைவு பகுதியில் செயற்கை நீருற்று உள்ளது. இது விழாக்காலங்களில் மட்டும் பயன்பாட்டிலிருக்கும். மற்ற நேரங்களில் கவனிக்கப்படாமல் கிடக்கும். இதனால் இங்கு மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியும் அதிகரித்தது. இந்நிலையில், கமிஷனர் ரவிச்சந்திரன் செயற்கை நீருற்றை ஆய்வு செய்து, உடனே சுத்தப்படுத்த உத்தரவிட்டார். அதன்படி சுகாதார பணியாளர்கள் செயற்கை நீருற்றை நேற்று சுத்தம் செய்தனர்.
Similar News
News November 26, 2025
திண்டுக்கல்: கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது

திண்டுக்கல் அருகே ரியல் எஸ்டேட் தொழிலுக்காக மனைவி வாங்கிய ரூ.1 கோடி கடனை திருப்பி தராததால் அவரின் கணவரை மர்மகும்பல் காரில் கடத்தி சென்றது. இதுகுறித்து அவர் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், ராமச்சந்திரன், ரீகன் சக்கரவர்த்தி, வெங்கடேஷ்குமார், பாலாஜி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
News November 26, 2025
திண்டுக்கல்: வாட்ஸ் ஆப் இருக்கா? சூப்பர் தகவல்

திண்டுக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
திண்டுக்கல்: சொந்த வீடு வேண்டுமா?

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.


