News August 2, 2024
திண்டுக்கல் மாநகராட்சி நிதி கையாடல் ஒருவர் சஸ்பெண்ட்

திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தில் ரூபாய் 4.66- கோடி ரூபாய் கையாடல் செய்ததை தொடர்ந்து இளநிலை உதவியாளா்கள் சரவணன், சதீஷ், கண்காணிப்பாளர் சாந்தி ஆகிய மூவரை மாநகராட்சி ஆணையர் சஸ்பெண்ட் செய்தார். இந்நிலையில் இன்று மாநகராட்சி நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ் என்பவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Similar News
News December 12, 2025
அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

திண்டுக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் டிசம்பர் 13ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும். குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, புதிய அட்டை கோரிக்கை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்தார்.
News December 12, 2025
24 தொகுதிகளில் தான் அதிமுக போட்டி – அமைச்சர் பெரியசாமி!

ஆத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “2026 தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என அதிமுகவினர் சொல்கிறார்கள். அந்த அளவிற்கு போட்டியிடுவதற்கு அவர்களுக்கு இடமில்லை. அதிமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு 210 தொகுதி போக மீதமுள்ள 24 தொகுதிகளில் தான் அதிமுக போட்டியிடவேண்டிய நிலைமை உள்ளது. இவர்களால் எப்படி 210 தொகுதிகளில் வெற்றிபெற முடியும்” என்றார்.
News December 12, 2025
24 தொகுதிகளில் தான் அதிமுக போட்டி – அமைச்சர் பெரியசாமி!

ஆத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “2026 தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என அதிமுகவினர் சொல்கிறார்கள். அந்த அளவிற்கு போட்டியிடுவதற்கு அவர்களுக்கு இடமில்லை. அதிமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு 210 தொகுதி போக மீதமுள்ள 24 தொகுதிகளில் தான் அதிமுக போட்டியிடவேண்டிய நிலைமை உள்ளது. இவர்களால் எப்படி 210 தொகுதிகளில் வெற்றிபெற முடியும்” என்றார்.


