News August 14, 2024
திண்டுக்கல்: மாடித்தோட்டம் அமைத்தவர்களுக்கு விருது

திண்டுக்கல் பகுதியில் மாடித் தோட்டம் அமைத்த 100 பேருக்கு சுதந்திர தினவிழாவில், விருது வழங்கி கெளரவிக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, 48 வாா்டுகளிலும் மொத்தம் 100 போ் தெரிவு செய்யப்பட்டுள்ளனா். இதன் மூலம், மாடித் தோட்டம் அமைத்து மக்கும் குப்பைகளை வீடுகளிலேயே உரமாக பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 14, 2025
ஒட்டன்சத்திரத்தில் தொழிலாளி துடிதுடித்து பலி!

ஒட்டன்சத்திரம் அருகே காப்பிலியபட்டி கிராமத்தைச் சேர்ந்த 46 வயது கட்டத் தொழிலாளி பெருமாள், நேற்று ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் தனியார் கட்டடத்தில் மின்தூக்கி இயக்கி பணியாற்றும்போது 3-ஆவது மாடியிலிருந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒட்டன்சத்திரம் போலீஸ் சம்பவத்தை விசாரித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 14, 2025
அறிவித்தார் திண்டுக்கல் ஆட்சியர்!

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் அரசுப் பணிக்காலியிடங்களுக்கு தயாராகும் வேலைநாடுநர்களுக்கான இலவச ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகளை 14.11.2025 துவங்குகிறது. SSC, LIC, IBPS, RRB, TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மாதிரித் தேர்வுகளும் இலவசமாக நடத்தப்படும். ஆர்வமுள்ளோர் நேரடியாக மையத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் ஆட்சியர் தெரிவிப்பு.ஷேர் பண்ணுங்க
News November 14, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு புகைப்படத்தில் , “அங்கீகரிக்கப்படாத வேலைவாய்ப்பு செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். உங்கள் கைபேசிக்கு வரும் பகுதி நேர வேலைவாய்ப்பு அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்.
மோசடி தொடர்பான புகார்களுக்கு உதவி எண்: 1930, வலைத்தளம்: www.cybercrime.gov.in தொடர்பு கொள்ளலாம்.


