News August 17, 2024

திண்டுக்கல்: மரநாயை வேட்டையாடிய மறறொருவர் கைது

image

ஒட்டன்சத்திரம் வனச்சரகத்துக்குட்பட்ட பூதமலை பகுதியில் கடந்த 8ஆம் தேதி மரநாயை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட வழக்கில் 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த கண்ணப்பன், காளிமுத்து ஆகியோரை வனத்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் காளிமுத்துவை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கண்ணப்பனை தேடி வருகின்றனர்.

Similar News

News December 20, 2025

திண்டுக்கல் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கானு தெரியலையா? கவலை வேண்டாம். முதலில் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், தொகுதியை பதிவிட்டு, உங்கள் பெயர் உள்ளதா என பரிசோதியுங்கள். இதில் உங்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால் www.voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாக, 2026 ஜன.18ம் தேதிக்குள் உங்கள் பெயரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலாம். இதை SHARE பண்ணுங்க.

News December 20, 2025

JUSTIN: திண்டுக்கல்லில் தொடரும் போராட்டம்

image

திண்டுக்கல்லில் காலமுறை ஊதியத்துடன் கூடிய நிரந்தர பணியிடங்களை வழங்குமாறு செவிலியர்கள், 3-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக அரசு நடவடிக்கை எடுக்காததால், செவிலியர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு போராட்டம் நடத்துகிறார்கள். சமூக ஆர்வலர்கள் அரசு அவர்களின் கோரிக்கையை உடனடியாக கவனிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

News December 20, 2025

ஒட்டன்சத்திரம் அருகே சோகம்: காவலர் உயிரிழப்பு

image

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே நீலமலைக்கோட்டை லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சரவணன். ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி அலுவலகத்தில் தலைமை காவலராக பணி புரிந்து வருகிறார். நேற்று மதியம் பணியில் இருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!