News August 17, 2024
திண்டுக்கல்: மரநாயை வேட்டையாடிய மறறொருவர் கைது

ஒட்டன்சத்திரம் வனச்சரகத்துக்குட்பட்ட பூதமலை பகுதியில் கடந்த 8ஆம் தேதி மரநாயை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட வழக்கில் 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த கண்ணப்பன், காளிமுத்து ஆகியோரை வனத்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் காளிமுத்துவை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கண்ணப்பனை தேடி வருகின்றனர்.
Similar News
News December 15, 2025
திண்டுக்கல் அருகே சோகம்: குழந்தை பலி!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வங்கமனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜன். இவருடைய மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு ஒன்றரை மாத வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்த குழந்தை நேற்று இரவு திடீரென உயிரிழந்து விட்டது. குழந்தையின் திடீர் சாவு குறித்து, வடமதுரை போலீசார் வழக்கு பதிந்து செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 15, 2025
திண்டுக்கல்: ஹவுஸ் ஓனர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மாவட்ட மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை SHARE பண்ணுங்க!
News December 15, 2025
திண்டுக்கல்: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!


