News August 17, 2024

திண்டுக்கல்: மரநாயை வேட்டையாடிய மறறொருவர் கைது

image

ஒட்டன்சத்திரம் வனச்சரகத்துக்குட்பட்ட பூதமலை பகுதியில் கடந்த 8ஆம் தேதி மரநாயை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட வழக்கில் 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த கண்ணப்பன், காளிமுத்து ஆகியோரை வனத்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் காளிமுத்துவை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கண்ணப்பனை தேடி வருகின்றனர்.

Similar News

News November 24, 2025

BREAKING: விடுமுறையா? திண்டுக்கல் கலெக்டர் அறிவிப்பு!

image

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.24) கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார்.

News November 24, 2025

திண்டுக்கல் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (நவ.25) கோவிலூர், ஒட்டன்சத்திரம், ரெட்டியபட்டி, உசிலம்பட்டி, சத்திரப்பட்டி, ஆத்தூர், விருப்பாச்சி, புலியூர்நத்தம், அம்பிளிக்கை, செம்பட்டி, , கசவனம்பட்டி, மேட்டுப்பட்டி, பூதிபுரம், வடமதுரை, அடியனூத்து, நாகல்நகர், செங்குறிச்சி, சிலுவத்தூர், செந்துறை, பிள்ளையார்நத்தம், காந்திகிராமம், தொப்பம்பட்டி, சின்னாளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு. SHARE IT!

News November 24, 2025

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்களின் விபரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் (நவம்பர் 23) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், பட்டியலில் கொடுக்கப்பட்ட உதவி எண்களை தொடர்பு கொண்டு, தேவையான உதவிகளைப் பெறலாம். திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இதற்காக அனைத்து தரப்பினரையும் அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!