News August 17, 2024
திண்டுக்கல்: மரநாயை வேட்டையாடிய மறறொருவர் கைது

ஒட்டன்சத்திரம் வனச்சரகத்துக்குட்பட்ட பூதமலை பகுதியில் கடந்த 8ஆம் தேதி மரநாயை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட வழக்கில் 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த கண்ணப்பன், காளிமுத்து ஆகியோரை வனத்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் காளிமுத்துவை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கண்ணப்பனை தேடி வருகின்றனர்.
Similar News
News October 27, 2025
திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்!

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் இரவு 11 மணி முதல் திங்கட்கிழமை இன்று காலை 6 மணி வரை, நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 26, 2025
திண்டுக்கல் மாநகராட்சி வார்டு சிறப்பு கூட்டம்

திண்டுக்கல் மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகின்ற அக்.27 மற்றும் 29 ஆகிய நாட்களில் வார்டு சிறப்பு கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்து கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
News October 26, 2025
திண்டுக்கல்: B.E / B.Tech டிகிரி போதும் வேலை!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)!
மொத்த பணியிடங்கள்: 340
கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <


