News August 10, 2024
திண்டுக்கல்: பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஆக.10 காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல்,பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கு மனு அளித்து பயன்பெறலாம்.
Similar News
News October 19, 2025
திண்டுக்கல்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News October 19, 2025
திண்டுக்கல் அருகே விபத்து: 17 வயது மாணவர் பலி!

தாடிக்கொம்பு, காமராஜபுரத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் பரத் (வயது 17). நேற்று முன்தினம் தனது நண்பர்களான சபரீஸ்வரன் (18) மற்றும் கலையரசன் (18) ஆகியோருடன் டூவிலரில் வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில் சென்றுக் கொண்டு இருந்தனர். அப்போது டூவீலர் திடீரென நிலைதடுமாறி சாலையோரத் தடுப்புச்சுவரில் மோதியது. இந்த விபத்தில் பரத் பரிதாபமாக உயிரிழந்தார்.திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை!
News October 19, 2025
கொடைக்கானலில் நீரில் மூழ்கி வாலிபர் பலி!

பொள்ளாச்சியைச் சேர்ந்த 10 வாலிபர்கள் நண்பர்கள் குழுவாக நேற்று கொடைக்கானலுக்குச் சுற்றுலா வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரு அருவிப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது, பொள்ளாச்சியைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் நந்தகுமார் (வயது 21) என்பவர் எதிர்பாராதவிதமாகத் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்புத் துறையினர் இளைஞரின் உடலை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.