News March 27, 2024

திண்டுக்கல்: தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்

image

வேடசந்தூர் தாலுகா அய்யலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மலை கிராமமான 14வது வார்டு சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தங்களுக்கு முறையான சாலை வசதி குடிநீர் வசதி இல்லாததால் நாங்கள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்தும் கருப்பு கொடி வைத்துள்ளனர். இதை பார்த்த அரசியல் கட்சி பிரமுகர்கள் அப்பகுதி மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Similar News

News November 3, 2025

திண்டுக்கல் அருகே முளைத்த அதிசய காளான்!

image

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே உள்ள பூசாரிபட்டி கிராமத்தில் ஒரு விவசாயத் தோட்டத்தில் சுமார் 13 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான காளான் முளைத்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இவ்வளவு பிரம்மாண்டமான காளான் முளைத்தது இதுவே முதல்முறை என்பதால், பூசாரிபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் திரண்டு வந்து இந்தக் காளானை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

News November 3, 2025

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (நவம்பர் 2) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம், பழனி,ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News November 3, 2025

திண்டுக்கல் மாவட்ட போலீசார் சார்பில் விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்கள் மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக வீட்டுகள், கடைகள், பொதுத்தளங்களில் சிசிடிவி கேமிரா பொருத்துவது குறித்தும் “சிசிடிவி கேமிரா பொருத்துவோம், பாதுகாப்பாக இருப்போம்” என்ற செய்தியையும் பகிர்ந்து வருகின்றனர். குற்றங்களைத் தடுப்பதில் மக்களின் பங்களிப்பு அவசியம் எனவும் போலீசார் வலியுறுத்துகின்றனர்.

error: Content is protected !!