News March 27, 2024
திண்டுக்கல்: தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்

வேடசந்தூர் தாலுகா அய்யலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மலை கிராமமான 14வது வார்டு சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தங்களுக்கு முறையான சாலை வசதி குடிநீர் வசதி இல்லாததால் நாங்கள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்தும் கருப்பு கொடி வைத்துள்ளனர். இதை பார்த்த அரசியல் கட்சி பிரமுகர்கள் அப்பகுதி மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Similar News
News November 10, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் கரண்ட் கட்!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (நவ.11) மின் பராமரிப்பு பணி காரணமாக கள்ளிமந்தையம், பூசாரிப்பட்டி, கூத்தம் பூண்டி, தேவத்தூர், ரெட்டியார்சத்திரம், அணைப்பட்டி, அய்யர்மடம், மினுக்கம்பட்டி, எஸ்.சுக்காம்பட்டி, தாடிக்கொம்பு, சில்வார்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி, அழகுபட்டி, விட்டல்நாயக்கன்பட்டி, போடுவார்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT!
News November 10, 2025
திண்டுக்கலில் பைக் திருட்டு; 3 சிறுவர்கள் கைது

திண்டுக்கல் நகரில் இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக திருடப்பட்ட வழக்குகளை டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் போலீசார் விசாரித்து, சிசிடிவி காட்சிகள் மூலம் தடயங்களை பின்தொடர்ந்தனர். விசாரணையில் திண்டுக்கல் மற்றும் வத்தலக்குண்டு பகுதிகளைச் சேர்ந்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 9 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. நடவடிக்கையை எஸ்பி பிரதீப் பாராட்டினார்.
News November 9, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம் இன்று நவம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


