News March 27, 2024

திண்டுக்கல்: தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்

image

வேடசந்தூர் தாலுகா அய்யலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மலை கிராமமான 14வது வார்டு சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தங்களுக்கு முறையான சாலை வசதி குடிநீர் வசதி இல்லாததால் நாங்கள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்தும் கருப்பு கொடி வைத்துள்ளனர். இதை பார்த்த அரசியல் கட்சி பிரமுகர்கள் அப்பகுதி மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Similar News

News December 18, 2025

திண்டுக்கல்: வீடு கட்ட போறீங்களா? இத பண்ணுங்க!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இதனை வீடுகட்ட போகும் உங்கள் நண்பருக்கு SHARE பண்ணுங்க!

News December 18, 2025

திண்டுக்கலில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு – 5,168 பேர் பங்கேற்பு!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்துத் தேர்வை 5,168 பேர் எழுதுகின்றனர். இதில் 4,011 ஆண்கள், 1,157 பெண்கள் உள்ளனர். GTN கலைக்கல்லூரியில் 1,800, SSM பொறியியல் கல்லூரியில் 2,000, PSNA பொறியியல் கல்லூரியில் 1,360 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு 2 தாள்களாக காலை 10 முதல் 12.30 மணி, பிற்பகல் 2.30 முதல் 5 மணி வரை நடக்கிறது.

News December 18, 2025

திண்டுக்கல்: உள்ளூரில் வேலை வேண்டுமா? APPLY NOW

image

திண்டுக்கல் Tata COATS நிறுவனத்தில் AutoCAD 2D, 3D&SolidWorks பணிக்காக 5 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐடிஐ, டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர்கள் இதற்கு ஜன.1க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படுவதோடு, இலவச உணவு மற்றும் தங்குமிட வசதியும் அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 89258-97701 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!