News April 12, 2025

திண்டுக்கல்: திடீர் மின்தடையா ? உடனே இதுக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

Similar News

News November 7, 2025

திண்டுக்கல்: நடந்து சென்ற முதியவர் மீது கார் மோதி விபத்து

image

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே (நவம்பர் 6) இன்று நடந்து சென்ற முதியவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் முதியவரின் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது, அருகில் இருந்த பொதுமக்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஒட்டன்சத்திரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

News November 7, 2025

திண்டுக்கல்லில் தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று கடந்த ஆகஸ்ட் மாதம் 30 மற்றும் 31 ஆகிய இரு தேதிகளில் மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் எழுதிய ஜூனியர் மற்றும் சீனியர் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்விற்கான முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. இம்முடிவுகளை https://tndtegteonline.in/GTEOnline/GTEResultAUG2025.php என்ற இணையதளத்தில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 7, 2025

திண்டுக்கல் மாவட்டத்தின் இரவு ரோந்து காவலர்கள்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் திண்டுக்கல், ஆத்தூர் ,நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!