News April 3, 2024
திண்டுக்கல்: சரக்கு பாட்டிலுக்கு தமிழ் பெயர்

பழனி புஷ்பத்தூர் பாமக வேட்பாளர் திலகபாமா வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டார். தமிழ்நாட்டில் திமுக அரசு சரக்கு பாட்டிலுக்கு வீரன் என்று தமிழ் பெயர் வைக்கிறது. பிரதமர் மோடி திருக்குறளை உலக அரங்கில் எடுத்துக் கூறி தமிழை வளர்க்கிறார். பிரதமர் யார் என்பதே தெரியாமல் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வாக்கு சேகரிக்க வருபவர்களை நிராகரிப்பு செய்யுங்கள் என தெரிவித்தார்.
Similar News
News April 20, 2025
திண்டுக்கல் போக்குவரத்து கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 60 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. <
News April 20, 2025
4 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தம்பதி தற்கொலை முயற்சி

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கடம்பன் குளம் அருகே நான்கு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்ததோடு கணவன் மனைவி தற்கொலைக்கு முயற்சி; கணவன் கவலைக்கிடம், மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுக்கு ஆறு மருத்துவர்கள் கொண்ட குழு ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News April 19, 2025
திண்டுக்கல் காவல் வாகனங்கள் ஆய்வு

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகம் அருகே உள்ள வளாகத்தில் காவல் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், அவர்கள் அறிவுறுத்தலின்படி ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் அவர்கள் இன்று (19.04.2025) ஆய்வு மேற்கொண்டார்கள். காவல் வாகனங்கள், குறிப்பாக உதிரிபாகங்கள் மாற்ற வேண்டிய வாகனங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டது