News September 13, 2024

திண்டுக்கல்: குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு

image

திண்டுக்கல்லில் 2 குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். திண்டுக்கல்லை சேர்ந்த தலா 2 குழந்தைகள், பெரியவர்கள் என 4 பேர் காய்ச்சலுடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர். அவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதித்தபோது டெங்கு உறுதியானது. அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Similar News

News December 20, 2025

ஒட்டன்சத்திரம் அருகே சோகம்: காவலர் உயிரிழப்பு

image

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே நீலமலைக்கோட்டை லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சரவணன். ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி அலுவலகத்தில் தலைமை காவலராக பணி புரிந்து வருகிறார். நேற்று மதியம் பணியில் இருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News December 20, 2025

திண்டுக்கல்லில் யார் அதிகம் தெரியுமா?

image

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 16,09,553 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 78,4467, பெண் வாக்காளர்கள் 82,4921 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 165 பேர் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 3,24,894 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 20, 2025

நத்தம் அருகே சோகம்: விஷம் குடித்து தற்கொலை

image

நத்தம் அருகே சீரங்கம்பட்டியை சேர்ந்த வெள்ளையம்மாள் (65) என்ற மூதாட்டி, நீண்ட நாட்களாக சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். உடல்நலக்குறைவால் மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!