News April 16, 2025
திண்டுக்கல் கிரிக்கெட் வீரர்கள் கவனத்திற்கு !

தமிழக மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 14,16,19 வயதுக்குட்பட்ட இருபாலர் கிரிக்கெட் அணிக்கான தேர்வு வரும் ஏப்.18ஆம் தேதி நடக்கிறது. சீலப்பாடி பிரஸித்தி வித்யோதயா பள்ளியில் நடைபெறும் இத்தேர்விற்கு ஆதார், பிறப்புசான்றிதழ், விளையாட்டு உபகரணங்கள், வெள்ளை சீருடையுடன் வரவும். மேலும் விவரம் பெற 96556 63945 எண்ணை அணுகவும். SHARE பண்ணுங்க !
Similar News
News April 21, 2025
திண்டுக்கல்: பெண்ணை எரித்த காதலன் கைது

தருமத்துப்பட்டி பன்றிமலை சாலையில் அமைதிசோலை பகுதியில் நீரோடையில் கடந்த 13-ம் தேதி இளம் பெண் எரித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக கன்னிவாடி காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு சாணார்பட்டி, எமக்கல்லாபுரத்தை சேர்ந்த பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்ய வற்புறுத்தியதால் மாரியம்மாள் என்ற பெண்ணை எரித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
News April 21, 2025
திருமண தடை நீக்கும் அற்புத கோவில்

திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அருகே பிரசித்தி பெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக சுப்பிரமணியர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமணத்தடை விலகி இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 21, 2025
திண்டுக்கல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 25-ந்தேதி காலை 10.30 மணிக்கு, விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து துறைகளின் தலைமை அலுவலர்கள் கலந்து கொண்டு மானிய திட்டங்கள், விவசாய கடன் தொடர்பாக விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.