News February 17, 2025
திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (உங்களது மொபைல் போனுக்கு முன் பின் தெரியாத நபர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகள் அல்லது லிங்கை கிளிக் செய்யவும் வேண்டாம்.. அதில் உங்களது விபரங்களை பதிவு செய்யும் வேண்டாம்…) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News December 14, 2025
திண்டுக்கல் அருகே நாசம் செய்த காட்டு யானைகள்!

திண்டுக்கல்: கன்னிவாடி அருகே காட்டு யானைகள் அடிக்கடி மலையடி வர தோட்டங்களுக்குள் புகுந்து விடுகிறது. அதன்படி கன்னிவாடி அருகே முத்துப்பாண்டி என்பவரின் தோட்டத்தில் புகுந்தயானைகள் அங்கு பயிரிட்டு இருந்த வாழை மரங்களை மிதித்து உடைத்து நாசம் செய்தது.வனச்சரகர் குமரேசன் தலைமையிலான வனப் பணியாளர்கள் அங்கு வந்து சேதமானமரங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
News December 14, 2025
கொடைக்கானல் பஸ் சக்கரத்தில் சிக்கி பலி!

ஈரோடு மூலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த லோகவிக்னேஷ் (26), நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்குச் சென்றார். வத்தலக்குண்டு அருகே தனியார் பேருந்தை அவர் முந்திச் செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 14, 2025
பழனி அருகே நேபாள பெண் விபரீதம் முடிவு!

திண்டுக்கல்: நேபாளம் நாட்டை சேர்ந்த சங்கர் சுணார் (வயது 25). இவர் தனது மனைவி ஜனப் பரியாருடன் (18) பழனி அருகே ஆண்டிப்பட்டியில் தனியார் கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்தார். ஜனப்பரியார் அடிக்கடி செல்போன் பார்த்ததைசுணார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜனப் பரியார் நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து நெய்காரப்பட்டி போலீசார் விசாரணை!


