News August 17, 2024

திண்டுக்கல்: எஸ்டிபிஐ கட்சியினர் மனு

image

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவர் சி.கைசர் அலி தலைமையில் அந்தக் கட்சியினர் மனு அளிக்க வந்தனர். இந்து முன்னணி அமைப்பின் மாநில முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் உண்மைக்கு மாறான தகவல், சமூக பதட்டத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Similar News

News December 6, 2025

திண்டுக்கல் காவல்துறையின் மழைக்கால பாதுகாப்பு அறிவுரை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இணையதளம் மூலம் இன்று வெளியிட்ட விழிப்புணர்வு அறிவிப்பில், ஏரி, குளம், கால்வாய்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளை நீர்நிலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

News December 6, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, போலியான வேலை வாய்ப்பு விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை வாங்கிக் தருவதாக கூறி பணம் பெறும் மோசடிகள் அதிகரித்து வருவதால், எந்த நபரின் போலியான வாக்குறுதியை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், உடனே 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

News December 6, 2025

நத்தத்தில் தட்டி தூக்கிய அமைச்சர்!

image

நத்தம் சட்டமன்றத் தொகுதி பகுதிகளில் பல்வேறு மாற்று கட்சியினர் தங்கள் கட்சிகளை விட்டு விலகி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் R.சக்கரபாணி தலைமையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம், ஒன்றிய செயலாளர்கள் சேக்சிக்கந்தர் பாட்சா, பழனிச்சாமி, ரத்தினக்குமார், தொகுதி பார்வையாளர் ரஞ்சன்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!