News January 24, 2025

திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல்லில் இன்று 24-01-2025 இரவு 11.00 மணி முதல் நாளை சனிக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது…

Similar News

News November 13, 2025

திண்டுக்கல்லில் இலவச தையல் பயிற்சி!

image

திண்டுக்கல்லில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. 300 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 13, 2025

திண்டுக்கல் அருகே வீடு புகுந்து துணிகர கொள்ளை!

image

திண்டுக்கல் நந்தவனப்பட்டி டிரஸ்சரி காலனியை சேர்ந்த பேட்டரி கடை அதிபர் ஜான்கிறிஸ்டோபர் (52) சென்னையில் மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 19 பவுன் தங்க நகை, 100 கிராம் வெள்ளி, ரூ.11,000பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தகவல் அறிந்த தாடிக்கொம்பு காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடுகின்றனர்.

News November 13, 2025

பழனியில் தந்தை–மகன் அதிரடி கைது

image

பழனியில் கஞ்சா வைத்திருந்ததாக தந்தை–மகன் இருவரை போலீசார் கைது செய்தனர். பழனி–திண்டுக்கல் சாலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரை விசாரித்ததில், அவர்கள் ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த ஷாநாவாஷ் (46), மகன் சாது உசேன் (19) என தெரியவந்தது. அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. பின் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

error: Content is protected !!