News September 13, 2024
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் கல்வித்துறை சார்ந்த பணிகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் இன்று (13.09.24) நடைபெற்றது. அருகில் முதன்மை கல்வி அலுவலர் புண்ணிக்கொடி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.
Similar News
News December 3, 2025
திண்டுக்கல்: பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News December 3, 2025
திண்டுக்கல்: 144 தடை உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சின்னாளபட்டி அருகே உள்ள, பெருமாள் கோவில் பட்டியில் இரு சமூகத்தினருக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பொது அமைதியை ஏற்படுத்தும் விதமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் செ.சரவணன் 144- உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் அங்கு காவல்துறையினர் இன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
News December 3, 2025
திண்டுக்கல் : இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.


