News April 14, 2025
திண்டுக்கல்: அம்மன் நகையை திருடிய பூசாரி !

திண்டுக்கல்: ஆத்தூர் வட்டம் அய்யம்பாளையத்தில் உள்ள காளியம்மன் கோயிலின் 10 பவுன் நகையை பூசாரி முருகன் மற்றும் அவரது மகன்கள் மணி, முத்துப்பாண்டி ஆகியோர் கையாடல் செய்து தங்க நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை மாற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பூசாரியை எதிர்த்து ஊர் மக்கள் கோயிலை முற்றுகையிட்டனர். இந்நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 20, 2025
திண்டுக்கல் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கானு தெரியலையா? கவலை வேண்டாம். முதலில் இந்த லிங்கை <
News December 20, 2025
JUSTIN: திண்டுக்கல்லில் தொடரும் போராட்டம்

திண்டுக்கல்லில் காலமுறை ஊதியத்துடன் கூடிய நிரந்தர பணியிடங்களை வழங்குமாறு செவிலியர்கள், 3-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக அரசு நடவடிக்கை எடுக்காததால், செவிலியர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு போராட்டம் நடத்துகிறார்கள். சமூக ஆர்வலர்கள் அரசு அவர்களின் கோரிக்கையை உடனடியாக கவனிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
News December 20, 2025
ஒட்டன்சத்திரம் அருகே சோகம்: காவலர் உயிரிழப்பு

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே நீலமலைக்கோட்டை லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சரவணன். ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி அலுவலகத்தில் தலைமை காவலராக பணி புரிந்து வருகிறார். நேற்று மதியம் பணியில் இருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


