News April 14, 2025

திண்டுக்கல்: அம்மன் நகையை திருடிய பூசாரி !

image

திண்டுக்கல்: ஆத்தூர் வட்டம் அய்யம்பாளையத்தில் உள்ள காளியம்மன் கோயிலின் 10 பவுன் நகையை பூசாரி முருகன் மற்றும் அவரது மகன்கள் மணி, முத்துப்பாண்டி ஆகியோர் கையாடல் செய்து தங்க நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை மாற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பூசாரியை எதிர்த்து ஊர் மக்கள் கோயிலை முற்றுகையிட்டனர். இந்நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Similar News

News November 28, 2025

பழனியில் 4 இடங்களில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு!

image

பழனி புறநகர் பகுதிகளான R.R. மில் பகுதி, VK.மில் பகுதி, RG- நகர், நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 4 கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் பழனி தாலுகா காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 28, 2025

திண்டுக்கல்: வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல்லில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News November 28, 2025

திண்டுக்கல்: வாட்ஸ் ஆப் இருக்கா? சூப்பர் தகவல்

image

திண்டுக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!