News August 26, 2024
திண்டுக்கல்லில் மர்மமான முறையில் இளைஞர் உயிரிழப்பு

திண்டுக்கல், கொடைரோடு- அம்மையநாயக்கனூர் செல்லும் நெடுஞ்சாலையில் புற்கள் நிறைந்த பகுதியில் இரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இளைஞர் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற அம்மையநாயக்கனூர் போலீசார் உடலை கைப்பற்றினர். இறந்து கிடந்தவர் கொடைரோடு ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த அருண்குமார்(24) என்பது தெரியவந்தது.
மேலும் இது கொலையா? விபத்தில் உயிரிழந்தாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
வேடசந்தூர் அருகே பரபரப்பு.. சிக்கிய நபர்!

வேடசந்தூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி மனைவி மருதாயம்மாள். இவரது வீட்டில் கடந்த 13-ம் தேதி மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்து, தங்க செயின் திருடி சென்றது தொடர்பாக, வேடசந்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, சிவகங்கையை சேர்ந்த செந்தில்குமார் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
News November 28, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம் வெளியிடப்பட்டது. இதில் நேற்று (நவம்பர் 27) வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
News November 28, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம் வெளியிடப்பட்டது. இதில் நேற்று (நவம்பர் 27) வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


