News April 28, 2025
திண்டுக்கல்லில் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை!

திண்டுக்கல்: வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே உள்ள தூங்கனம்பட்டி சேர்ந்தவர் பரமேஸ்வரன் (38). இவர் தனது மனைவி மணிமேகலை மற்றும் மகள் மகனுடன் சென்னையில் தங்கி நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான தூங்கனம்பட்டிக்கு வந்தவர், தனது தோட்டத்தின் மோட்டார் அறையில் சேலையால் தூக்கு மாட்டி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News November 3, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (நவம்பர் 2) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம், பழனி,ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
News November 3, 2025
திண்டுக்கல் மாவட்ட போலீசார் சார்பில் விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்கள் மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக வீட்டுகள், கடைகள், பொதுத்தளங்களில் சிசிடிவி கேமிரா பொருத்துவது குறித்தும் “சிசிடிவி கேமிரா பொருத்துவோம், பாதுகாப்பாக இருப்போம்” என்ற செய்தியையும் பகிர்ந்து வருகின்றனர். குற்றங்களைத் தடுப்பதில் மக்களின் பங்களிப்பு அவசியம் எனவும் போலீசார் வலியுறுத்துகின்றனர்.
News November 2, 2025
திண்டுக்கல்: 25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Civil Engineer பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000-ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <


