News April 28, 2025
திண்டுக்கல்லில் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை!

திண்டுக்கல்: வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே உள்ள தூங்கனம்பட்டி சேர்ந்தவர் பரமேஸ்வரன் (38). இவர் தனது மனைவி மணிமேகலை மற்றும் மகள் மகனுடன் சென்னையில் தங்கி நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான தூங்கனம்பட்டிக்கு வந்தவர், தனது தோட்டத்தின் மோட்டார் அறையில் சேலையால் தூக்கு மாட்டி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News September 18, 2025
திண்டுக்கல்லில் மினி பஸ் இயக்க அழைப்பு!

திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட ஏர்போர்ட் நகர் – விராலிப்பட்டி -ஆலம்பட்டி, அய்யலூர், வேடசந்தூர், வெல்லம்பட்டி சாலையூர், நால்ரோடு – சுள்ளறும்பு, பெருமாள்மலை – அடுக்கம், நிலக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன்- தாலுகா அலுவலகம், பெருமாள்மலை – கணேஷ்புரம் ஆகிய இடங்களில் மினி பேருந்துகளை இயக்க ஆர்வம் உள்ளவர்கள் நாளை(செப்.19) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
News September 18, 2025
திண்டுக்கல்லில் போதைக் காளான் விற்பனை!

திண்டுக்கல்: கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளை குறி வைத்து போதை காளானை விற்பனை செய்வதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பெயரில் இன்று(செப்.18) போதை காளானை விற்பனை செய்த அப்சர்வேட்டரி, கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன்(38) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த போதை காளானை கொடைக்கானல் காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.
News September 18, 2025
திண்டுக்கல்: டிரெண்டிங் AI போட்டோ எடிட் செய்தால் அபாயம்!

திண்டுக்கல் மக்களே Google Gemini பெயரில் வைரலாகும் Nano Banana Al ட்ரெண்ட் தொடர்பாக, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை போலியான இணையதளங்கள் அல்லது செயலிகளில் பதிவேற்ற வேண்டாம். ஒரே கிளிக்கில் உங்கள் வங்கிகணக்கு போன்ற தனிநபர் விபரங்கள் திருடப்படலாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!