News August 3, 2024
திண்டுக்கல்லில் திறனறிவு தேர்வு 2,266 பேர் விண்ணப்பம்

தமிழ்நாட்டில் 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு முதலமைச்சா் திறனறித் தோ்வு நாளை நடைபெற உள்ளது. எனவே வெற்றி பெறும் மாணவா்களுக்கு, 10 மாதங்களுக்கு தலா ரூ.1000 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். திண்டுக்கலில் மட்டும் 2,266 போ் விண்ணப்பித்துள்ளனர். பழனி கல்வி மாவட்டத்தில் 5, திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 4 என 9 தோ்வு மையத்தில் தோ்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 2, 2026
ஆயக்குடியில் தெரு நாய் கடித்து இரண்டு பேர் காயம்

ஆயக்குடி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி வருகிறது. இன்று மதியம் 1 மணி அளவில் இரண்டு பேரை நாய் கடித்து குதரி உள்ளது. காயமடைந்த அவர்கள் பழனி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையை பெற்று வருகின்றனர். உச்ச நீதி மன்றம் உத்தரவுப்படி தெரு நாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது
News January 2, 2026
திண்டுக்கல்: B.E, B.TECH, MBA போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E, B.TECH, MBA, ME முடித்த 21 முதல் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.3 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு இங்கு <
News January 2, 2026
குஜிலியம்பாறை அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல், குஜிலியம்பாறை ஆலம்பாடி ஊராட்சி காடமநாயக்கனூரைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் வினோத் (23). அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன், ஆர்.வெள்ளோடு – பிச்சனாம்பட்டி ரோட்டில் காரை ஓட்டிச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து காடமநாயக்கனூர்டி முத்துச்சாமி காடு அருகே கார் கவிழ்ந்தது. இதில் வினோத் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


