News April 27, 2025
திண்டுக்கல்லில் குற்றவாளிகளை கண்டறியும் App!

திண்டுக்கல்: பழனி பகுதியில் உள்ள விடுதி உரிமையாளர்களுக்கு குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க புதிய செயலி குறித்த ஆலோசனை காவல்துறையால் வழங்கப்பட்டது. இந்தச் செயலியில் விடுதியில் தங்க வருபவர்கள் தங்கலீன் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். மேலும், இளம் பெண்களுடன் வருபவர்கள், மது அருந்திவிட்டு வருபவர்களுக்கு அறைகள் தரக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.
Similar News
News December 2, 2025
திண்டுக்கல்: 10th போதும் பள்ளியில் வேலை!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: kvsangathan.nic.in
(ஷேர் பண்ணுங்க)
News December 2, 2025
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்துவர்கள் மானியம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்துவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன் தெரிவித்துள்ளார். விண்ணப்பப் படிவம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் மற்றும் www.bcmbcmw.tn.gov.in தளத்தில் இலவசமாக கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 28.02.2026க்குள் சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர், சேப்பாக்கம், சென்னைக்கு அனுப்ப வேண்டும்.
News December 2, 2025
கொடைக்கானலில் பெண்ணால் பரபரப்பு!

கொடைக்கானலில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண், நடமாடும் மருத்துவ வாகனம் மற்றும் அருகே இருந்த 8-க்கும் மேற்பட்ட வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பிடித்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


