News April 27, 2025
திண்டுக்கல்லில் குற்றவாளிகளை கண்டறியும் App!

திண்டுக்கல்: பழனி பகுதியில் உள்ள விடுதி உரிமையாளர்களுக்கு குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க புதிய செயலி குறித்த ஆலோசனை காவல்துறையால் வழங்கப்பட்டது. இந்தச் செயலியில் விடுதியில் தங்க வருபவர்கள் தங்கலீன் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். மேலும், இளம் பெண்களுடன் வருபவர்கள், மது அருந்திவிட்டு வருபவர்களுக்கு அறைகள் தரக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.
Similar News
News April 28, 2025
Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்த அசல்ஆவணங்களுடன் நேரில் வந்துபுகார் அளிக்க வேண்டும். திண்டுக்கல்லில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.
News April 28, 2025
திண்டுக்கல்: சத்துணவு மையத்தில் வேலை

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 139 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் உள்ள<
News April 28, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் மழை

திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வந்த சூழலில் நேற்றிலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக விட்டுவிட்டு கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் இப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உங்க ஊரில் மழை பெய்திருந்தால் கமெண்ட் பண்ணுங்க.